பக்கம் எண் :

4 செய்தக்காதி நொண்டி நாடகம்

            ஹஸன் ஹு ஸைன்O வணக்கம்

    7. அதிக குணவான் மதுர மொழியர்கள்
         அழகு தருமத வேள்வி சயனே
     யான ரகுநாத பெரிய தம்பியை
         யன்பிற்...........கொண் டாடிடவே
     மதின நகர்வாழ் புலியலி யருள்
         மைந்த ரெனவரு மசனை யுசைனையென்
     மனதி லன்பொடு தொழுதி றைஞ்சுவ
         னே...........யெந் நாயகனே.

        
     முஹிய்யித்தீன்O வணக்கம்

   8. மரும லர்ப்புசன் றரும சற்குண
         வள்ள லாகிய தெள்ளு மாமணி
     வகுதை யூர்செய்தக் காதி மன்புகழ்
         வாழ்த்திக் கொண் டாடிடவே
     குருவி னுத்தம சருவ சற்சனக்
         கோன்மு கிய்யித் தீன்ச ரண்களைக்
    குறியி னோடுகண் சிரசில் வைத்துக்கொண்
         டே...........னெந் நாயகனே.
                        _________

                    நொண்டியின் சிறப்பு
      
            அறுசீர்க்கழி நெடிலடி ஆசிரிய விருத்தம்

     தன்மமும் பொறையுங் கொண்ட சற்குண னிதிபோல் வந்த
     மன்மதன் வச்ர நாடன் வகுதைவாழ் செய்தக் காதி
     பொன்மகள் நிர்த்த மாடப் பூமகள் புகழ்கொண் டாட
     நன்மைசேர் கொலுவி னொண்டி நயத்தொடுந் தோன்றி னானே.