பக்கம் எண் :

நொண்டியின் வேண்டுதல்41


    213. செல்லைக்குடைதரித் தோர்5 மதினாச்
            செகம்புகழ் நபிமுகம் மதுநயி னார்
         எல்லைத்தலமாக வாழ்ந்திருந்
            திலங்குமாளிகையை வலஞ்சுற்றி னேன்

     214. சூகைமுலையருந்தி னோர்6மதினாச்
            சுகம்பெறு நபிமுகம் மதுநயி னார்
         ஏகனைத்தொழுதிறைஞ்சி வாழ்ந்திருந்
            திலங்குமாளிகையை வலஞ்சுற்றி னேன் 

     215. சுற்றிவந் தெதிரே நின்றேன் அவிடத்தில்
            துய்யோன் மறையோதுஞ் செய்துகள்* முன்னே
         வெற்றிச் சலாமுரைத்தேன்* அவிடத்தில்
            மேலோனைத் தொழுதொரு பாலிருந்தேன்

     216. வரிசை நபியிற சூல் முகம்மது
            மந்தார முகிற்குடைக் கொந்தாலத்தை
        அருகிலே சென்றுநபியைப் போற்றி
           ஆத்திரந் தீர்ந்திடத் தோத்திரஞ்செய்தேன்

     217. படியேழ் புகழ்நபி யைஅவு துல்லாO
            பாலக ராமிற சூல்நபியை
        அடியேன் மனக்குறை யும் போகவென்
           ஆத்திரந் தீர்ந்திடத் தோத்திரஞ்செய் தேன்

     218. மதியை யழைத்தந பி7 கஸ்தூரி
            வாசம்பொருந்திவந்த கோசாலத்தை
         நதியையழைத்தநபி யிடத்திற்கையுங்
            காலும் வளர்ந்திடது வாவிரந்தேன்