அவையடக்கம்
கனைகடல் முகிலைப் பார்த்தெனீர் உவரைக்
கழிப்பிமன் னுயிர்க்கெலாம்
இனிதாப்
புனையெனக் கேளா தெனினுமம் முகிலே
புரியுமென் செய்யுளின்
புகரை.
நினைவரு முழுநூ லுணர்ந்தவர் அகற்றி
நீடுல கினுக்கினி
தாக்க
அனையரை யான்கே ளாதிருந் திடினும்
அதுபுரிந் திடலவர்க்
கியல்பே.
(சொ - ள்.) கனைகடல் முகிலை பார்த்து என்நீர் உவரை கழிப்பி
மன்
உயிர்க்கு எலாம் இனிது ஆ புனைகு என கேளாது எனினும் - ஒலிக்கின்ற
கடலானது மேகத்தை நோக்கி, எனது நீரின் உவர்ச் சுவையினை நீக்கி, உலகில்
நிலைபெற்ற உயிர்கள் எல்லாவற்றிற்கும் இனிதாகும்படி செய்யென்று கேளா
தாயினும்; அம்முகிலே புரியும் - அந்த மேகந்தானே அவ்வாறு
செய்யாநிற்கும்; (அதுபோல்) நினைவு அருமுழு நூல் உணர்ந்தவர் -
நினைத்தற்கரிய பொருட் சிறப்புடைய முதல் நூலின் பொருளையறிந்த
சான்றோர்: என் செய்யுளின் புகரை அகற்றி - எனது நூலின்
செய்யுள்களிலுள்ள குற்றங்களை நீக்கி; நீடு உலகினுக்கு இனிது ஆக்க -
பெரிய இவ்வுலகத்தார்க்கு இனிதாம்படி செய்யுமாறு; அனையரை யான்
கேளாது இருந்திடினும் - அவர்களை யான் வேண்டிக் கொள்ளாது
விடினும். அது புரிந்திடுதல் அவர்க்கு இயல்பு - அதனை அங்ஙனம்
செய்திடல் அப்பெரியோர்க்கு இயல்பாம்.
(வி - ம்.) மேகம் கடல் நீரை முகந்து உவர் நீக்கி மழை (நன்னீர்)யாகப்
பெய்து உலகுக்கு நலம் புரிவது போல என் கவியைப் புலவர் படித்துக் குற்றம்
நீக்கி உலக மக்களுக்குக் கொடுப்பது அவர் கடமையாம் என்பது கருத்து.
கனைகடல்: வினைத்தொகை. புகர் குற்றம், எழுத்துக் குற்றம், சொற்குற்றம்
பொருட்குற்றம் முதலியவைகள். நீடு+உலகம்: உகரங்கெட்டது; உலகம் இடவாகு
பெயராய் மக்களை யுணர்த்திற்று. (16)
|
|
|
|