பெருநகரில் என்னை யார் மதிப்பார் -
சிறிதும் ஆராய்தலில்லாமல் வழிநடக்கத்
தொடங்கினேன்.
(வி - ம்.) பொற்ற : குறிப்புவினைப் பெயரெச்சம். பொற்ற
- அழகான : பொன்+து+அ.
ஆயாது வழிநடந்தேன் எனக் கழிவிரக்கமுற்றான் குசேலன். (193)
மாமகுட முடிமன்னர்
நனிவந்து காத்திருக்குங்
கோமகன்றன் தலைவாயில்
எவ்வாறு குறுகுவல்யான்
பூமலியும் அவ்வாயில்
புகினுமவன் திருச்சேவை
ஏமமுற ஏழையேற்
கெளிதுகிடைத்
திடுங்கொல்லோ.
(சொ - ள்.) மாமகுட முடிமன்னர் நனிவந்து காத்து இருக்கும் கோமகன்
தன்
தலைவாயில் எவ்வாறு குறுகுவல் யான் - பெருமையான திருமுடியைச் சென்னியில்
அணிந்துள்ள அரசர் பலரும் வந்து மிகவுங் காத்திருக்கின்ற இறைமகனாகிய
கண்ணபிரானது வாயில் முற்றத்திடத்தில் எங்ஙனம் சென்று யானடைகுவேன் ; பூ
மலியும் அவ் வாயில் புகினும் - பூமாலைகளால் அலங்கரிக்கப்பட்ட அந்த வாயிலில்
புகுந்தாலும் ; அவன் சேவை ஏமம் உற ஏழையேற்கு இனிது கிடைத்திடுங் கொல் -
அவனைக் காணும் காட்சிப்பேறு இன்பமுண்டாக ஏழையாகிய எனக்கு எளிதில்
வாய்த்திடுமோ ? (என்று குசேலன் கூறி வருந்தினன்).
(வி - ம்.) மகுடம் - கிரீடம். முடி - தலை. மகுடமுடி மன்னர் -
கிரீடம் வைத்த
முடியுடைய அரசர். கோமகன் - வேந்தன். குறுகுவல் - அணுகுவேன், நெருங்குவேன்.
ஏமம் உற - இன்பம் பொருந்த. (194)
கற்பகத்தைச் சார்ந்தும்வறுங்
காய்கேட்கத்
துணிவார்போல்
பொற்புடைய எம்பிரான்
திருமுனரி திற்புகுந்தும்
அற்பமுறு திருவேட்டல்
அறிவேகொல்
எனவுளத்துப்
பற்பலவும் எண்ணியயர்
வுயிர்த்தானப் பனவனே.
|