வரிகள் 124 - 128 : நெளித்திழிய...........பிடிபடியா வேறி சொற்பொருள் : பகைவர் நாட்டை நெளியும்படி செய்து அவை இழிவடையச் சினந்து மிதித்துப் போர்க்களத்தில் எதிர்த்துப் போராடும் மன்னருயிரைக் கூற்றுவனுக்கு உணவாகச் செய்கின்ற அயிராபதம் நின்றதன் மேல் பிடரியில் அருகில் நின்ற பெண் யானையைப் படியாக மிதித்து ஏறி அமர்ந்து. விளக்கம் : கொதித்து - சினந்து. கொதித்து வேற்றுப் புலத்தை நெளித்து மிதித்துஇழிய எனக் கூட்டிப் பொருள் கொள்க. பகைவர் நாட்டையழித்து அவருயிரைக் கூற்றுக் கருத்தும் அயிராபதம் என அதன் வீரம் கூறினர் அரசன் கோயிற்புறத்தே வந்து நின்று அங்கு நின்ற அயிராபதத்தின் எருத்தமேல் ஏறினன் எனக் கொள்க. |