10.
|
பாத்திரங்கொண்
டேபதிபாற் பாய்பசு வைப்பன்னிரண்டு
சூத்திரங்கொண் டேபிணித்த தூயோரும் - நேத்திரமாம் |
|
|
11. |
தீதில்
கவிதைத் திருமா ளிகைத்தேவர்
ஆதி முனிவ ரனைவோருஞ் - சாதியுறும் |
|
|
12. |
தந்திரத்தி
னாலொழியாச் சார்வினையைச் சாற்றுதிரு
மந்திரத்தி னாலொழித்த வல்லோரும் - செந்தமிழிற் |
|
|
13. |
பொய்யடிமை
யில்லாப் புலவரென்று நாவலர்சொல்
மெய்யடிமைச் சங்கத்து மேலோரும் - ஐயடிகள் |
|
|
14. |
காடவருஞ்
செஞ்சொற் கழறிற் றறிவாரும்
பாடவருந் தெய்வமொழிப் பாவலரும் - நாவருங் |
|
|
15. |
கல்லாதார்
சிங்கமெனக் கல்விகேள் விக்குரியர்
எல்லாரு நீயா யிருந்தமையாற் - சொல்லாரும் |
|
|
16. |
என்னடிக
ளேயுனைக்கண் டேத்தினிடர் தீருமென்றுன்
பொன்னடிக ளேபுகலாப் போற்றினேன் - பன்னியமென் |
|
|
17. |
பஞ்சிபடா
நூலே பலர்நெருடாப் பாவேகீண்
டெஞ்சியழுக் கேறா வியற்கலையே - விஞ்சுநிறந் |
|
|
18. |
தோயாத
செந்தமிழே சொல்லே ருழவரகந்
தீயாது சொல்விளையுஞ் செய்யுளே - வீயா |
|
|
19. |
தொருகுலத்தும்
வாரா துயிர்க்குயிராய் நின்றாய்
வருகுலமோ ரைந்தாயும் வந்தாய் - இருநிலத்துப் |
|
|
20.
|
புண்ணியஞ்சே
ருந்திப் புலத்தே வளிதரித்துக்
கண்ணிய வாக்காங் கருப்பமாய் - நண்ணித் |
|
|
21. |
தலைமிடறு
மூக்குரத்திற் சார்ந்திதழ்நாத் தந்தம்
உலைவிலா வண்ணத் துருவாய்த் - தலைதிரும்பி |
|
|
22. |
ஏற்பமுதன்
முப்பதெழுத் தாய்ச்சார் பிருநூற்று
நாற்ப தெழுத்தா நனிபிறந்தாய் - மேற்படவே |