பக்கம் எண் :

தமிழ்விடுதூது18


23.

எண்முதலா கப்பகரு மீரா றெனும்பருவம்
மண்முதலோர் செய்து வளர்க்குநாட் - கண்மணியோற்
 
24. பள்ளிக்கூ டத்தசையாம் பற்பலதொட் டிற்கிடத்தித்
தள்ளிச் சிறார்கூடித் தாலாட்டி - உள்ளிலகு
 
25. மஞ்சட் குளிப்பாட்டி மையிட்டு முப்பாலும்
மிஞ்சப் புகட்ட மிகவளர்ந்தாய் - மஞ்சரையே
 
26. பன்னியொரு பத்துப் பருவமிட்டு நீவளர்த்தாய்
உன்னை வளர்த்துவிட வொண்ணுமோ - முன்னே
 
27. நினையும் படிப்பெல்லா நின்னைப் படிப்பார்
உனையும் படிப்பிப்பா ருண்டோ - புனைதருநற்
 
28. செய்யுட்சொன் னான்குமுயர் செந்தமிழ்ச்சொல் லோர்நான்கும்
மெய்யுட் பொருளேழ் விதத்திணையும் - மையிலெழுத்
 
29. தாதியாப் பெட்டு மலங்கார மேழைந்தும்
பேதியாப் பேலெழின்மாப் பிள்ளையாய்ச் - சாதியிலே
 
30. ஆங்கமைசெப் பற்பண் ணகவற்பண் டுள்ளற்பண்
தூங்கற்பண் பட்டத்துத் தோகையரா - ஓங்குமனத்
 
31. தெண்கருவி யைந்தீன் றிடுநூற்று மூன்றான
பண்களும்பின் கல்யாணப் பாவையரா - யெண்கொளும்
 
32. நற்றா ரகமா நவரசமாம் பிள்ளைகளைப்
பெற்றாய் பெருவாழ்வு பெற்றாயே - உற்றகலாப்
 
33. பண்கள்முதற் பெண்களொடும் பாலரொடு நாடகமாம்
பெண்கொலுவில் வீற்றிருக்கப் பெற்றாயே - மண்புகழத்
 
34. தாழ்விலா வட்டா தசவன் னனைகளெனும்
வாழ்வெலாங் கண்டு மகிழ்ந்தாயே - ஆழ
 
35. நெடுங்கோல வையையிலென் னேசர்மேற் பட்ட
கொடுங்கோல்செங் கோலாகக் கொண்டாய் - அடங்காத