36.
|
எங்கோவே
பத்தென் றியம்புதிசைக் குள்ளேநின்
செங்கோல் செலாத திசையுண்டோ - இங்கேயுன் |
|
|
37. |
தேசமைம்பத்
தாறிற் றிசைச்சொற் பதினேழும்
மாசறநீ வைத்தகுறு மன்னியரோ - வீசு |
|
|
38. |
குடகடலுங்
கீழ்கடலுங் கோக்குமரி யாறும்
வடவரையு மெல்லை வகுத்தாய் - இடையிருந்த |
|
|
39. |
முன்னுறுந்தென்
பாண்டி முதற்புனனா டீறான
பன்னிரண்டு நாடுமப் பானாடோ - அந்நாட்டுள் |
|
|
40. |
வையை
கருவைமரு தாறுமரு வூர்நடுவே
ஐயநீ வாழு மரண்மனையோ - செய்யபுகழ் |
|
|
41. |
மூவேந்தர்
வாகனமா மூவுலகும் போய்வளைந்த
பாவேந்தே நீபெரிய பார்வேந்தோ - காவேந்து |
|
|
42. |
விண்ணவருங்
காணரிய வேதா கமங்களெலாம்
புண்ணியனே புன்றன் புரோகிதரோ - எண்ணரிய |
|
|
43. |
நல்லபெருங்
காப்பியங்க ணாடகா லங்காரஞ்
சொல்லரசே யுன்னுடைய தோழரோ - தொல்லுலகிற் |
|
|
44. |
சார்புரக்குங்
கோவேநற் சாத்திரங்க ளெல்லாமுன்
பார்புரக்குஞ் சேனா பதிகளோ - வீரரதிர் |
|
|
45. |
போர்ப்பா
ரதமும் புராணம் பதினெட்டுஞ்
சீர்ப்பாவே யுன்னுடைய சேனைகளோ - பார்ப்பார்கள் |
|
|
46. |
அக்கர
வர்த்தியென லாமென்பார் பூலோக
சக்கர வர்த்தியுநீ தானன்றோ - சக்கரமுன் |
|
|
47. |
பேந்தி
நெடுந்தேர்மே லேறிச் சுழிகுளம்
நீந்தியோர் கூட நிறைசதுக்கம் - போந்து |
|
|
48. |
மதுரங்
கமழ்மாலை மாற்றணிந்து சூழும்
சதுரங்க சேனை தயங்கச் - சதுராய் |