பக்கம் எண் :

தமிழ்விடுதூது19


36.

எங்கோவே பத்தென் றியம்புதிசைக் குள்ளேநின்
செங்கோல் செலாத திசையுண்டோ - இங்கேயுன்
 
37. தேசமைம்பத் தாறிற் றிசைச்சொற் பதினேழும்
மாசறநீ வைத்தகுறு மன்னியரோ - வீசு
 
38. குடகடலுங் கீழ்கடலுங் கோக்குமரி யாறும்
வடவரையு மெல்லை வகுத்தாய் - இடையிருந்த
 
39. முன்னுறுந்தென் பாண்டி முதற்புனனா டீறான
பன்னிரண்டு நாடுமப் பானாடோ - அந்நாட்டுள்
 
40. வையை கருவைமரு தாறுமரு வூர்நடுவே
ஐயநீ வாழு மரண்மனையோ - செய்யபுகழ்
 
41. மூவேந்தர் வாகனமா மூவுலகும் போய்வளைந்த
பாவேந்தே நீபெரிய பார்வேந்தோ - காவேந்து
 
42. விண்ணவருங் காணரிய வேதா கமங்களெலாம்
புண்ணியனே புன்றன் புரோகிதரோ - எண்ணரிய
 
43. நல்லபெருங் காப்பியங்க ணாடகா லங்காரஞ்
சொல்லரசே யுன்னுடைய தோழரோ - தொல்லுலகிற்
 
44. சார்புரக்குங் கோவேநற் சாத்திரங்க ளெல்லாமுன்
பார்புரக்குஞ் சேனா பதிகளோ - வீரரதிர்
 
45. போர்ப்பா ரதமும் புராணம் பதினெட்டுஞ்
சீர்ப்பாவே யுன்னுடைய சேனைகளோ - பார்ப்பார்கள்
 
46. அக்கர வர்த்தியென லாமென்பார் பூலோக
சக்கர வர்த்தியுநீ தானன்றோ - சக்கரமுன்
 
47. பேந்தி நெடுந்தேர்மே லேறிச் சுழிகுளம்
நீந்தியோர் கூட நிறைசதுக்கம் - போந்து
 
48. மதுரங் கமழ்மாலை மாற்றணிந்து சூழும்
சதுரங்க சேனை தயங்கச் - சதுராய்