49.
|
முரசங்
கறங்க முடிவேந்தர் சூழ
வரசங்க மீதிருந்து வாழ்ந்தே - அருள்வடிவாய் |
|
|
50. |
ஓங்குபுகழ்
மூவ ரொருபா வொருபஃதும்
ஆங்கவைசொல் லாதவூ ராளிசொல்லும் - ஓங்குமவன் |
|
|
51. |
கூற்றா
யரனெழுதுங் கோவையுங் கோதிறாய்
மாற்றா விரட்டைமணி மாலையும் - தேற்றமுறப் |
|
|
52. |
பற்றா
மிலக்கணநூற் பாவுநூற் பாவறிந்து
கற்றார் வழங்குபஞ்ச காப்பியமுங் - கொற்றவருக் |
|
|
53. |
கெண்ணிய
வன்னனைக ளீரொன் பதுமறியக்
கண்ணிய மிக்கபெருங் காப்பியமும் - நண்ணியே |
|
|
54. |
இன்புறு
சேரனரங் கேற்றமகிழ்ந் தம்பலத்தான்
அன்புறுபொன் வண்ணத்தந் தாதியும் - முன்பவர்சொல் |
|
|
55. |
மாத்தமிழா
மும்மணி மாலையும் பட்டினத்தார்
கோத்தணிந்த மும்மணிக் கோவையும் - மூத்தோர்கள் |
|
|
56. |
பாடி
யருள்பத்துப் பாட்டுமெட் டுத்தொகையும்
கேடில் பதினெட்டுக் கீழ்க்கணக்கும் - ஆடகமா |
|
|
57. |
வெற்பனையார்
மாதை விமலரிடத் தேயிருவர்
கற்பனையாற் சொன்ன கலம்பகமும் - முற்படையோ |
|
|
58. |
டாடற்
கலிங்கமழித் தாயிர மானைகொன்ற
பாடற் கரிய பரணியுங் - கூடல் |
|
|
59. |
நராதிபன்
கூத்தனெதிர் நண்ணியோர் கண்ணிக்
கொராயிரம்பொ னீந்த வுலாவும் - பராவுமவன் |
|
|
60. |
பிள்ளைத்
தமிழுமுன்னாம் பேராத பல்குரவர்
வெள்ளத் தினுமிகுத்தோர் மெய்காப்ப வுள்ளத்து |
|
|
61. |
வீரியஞ்
செய்து வினையொழிய வேராச
காரியஞ் செய்யுங் கவிதையே - பாரில் |