பக்கம் எண் :

தமிழ்விடுதூது22


75.

ஊனரச மாறல்லா லுண்டோ செவிகளுண
வான நவரசமுண் டாயினாய் - ஏனோர்க்
 
76. கழியா வனப்பொன் றலததிக முண்டோ
ஒழியா வனப்பெட் டுடையாய் - மொழிவேந்தர்
 
77. வாங்கு பொருள்கோள் வகைமூன்றே பெற்றார்நீ
ஓங்குபொருள் கோள்வகையெட் டுள்ளாயே - பாங்குபெற
 
78. ஓர்முப்பா லன்றியைம்பா லுள்ளா யுனைப்போலச்
சீர்முப்ப தும்படைத்த செல்வரார் - சேரமான்
 
79. தன்னடிக் கண்டு தளைவிடுத்தா யேழ்தளையுண்
பொன்னடிக்குண் டென்பதென்ன புத்தியோ - என்னரசே
 
80. திண்பா வலர்க்கறிவாஞ் செந்தமிழாய் நின்றவுன்னை
வெண்பாவென் றோதுவது மெய்தானோ - பண்பேர்
 
81. ஒலிப்பாவே சங்கத் துகமூன் றிருந்தாய்
கலிப்பாவென் றோதல் கணக்கோ - உலப்பில்
 
82. இருட்பா மருண்மாற்றி யீடேற்று முன்னை
மருட்பாவென் றோதல் வழக்கோ - தெருட்பாப்
 
83. பொருத்தமொரு பத்துப் பொருந்துமுனைத் தானே
விருத்தமென்று சொல்லல் விதியோ - இருட்குவையை
 
84. முந்தியொளி யால்விலக்கு முச்சுடரென் பாருனைப்போல்
வந்தென் மனத்திருளை மாற்றுமோ - சிந்தா
 
85. மணிகொடையின் மிக்கதென்பார் வண்கொடையு முன்பேர்
அணியும் பெருமையினா லன்றோ - தணியும்
 
86. துலங்காரங் கண்டசரந் தோள்வளைமற் றெல்லாம்
அலங்கார மேயுனைப்போ லாமோ - புலங்காணும்
 
87. உன்னைப் பொருளென் றுரைக்குந் தொறும்வளர்வாய்
பொன்னைப் பொருளென்னப் போதுமோ - கன்னமிட்டு