|
88.
|
மன்னர்
கவர்ந்தும் வளர்பொருளே கைப்பொருள்கள்
என்ன பொருளுனைப்போ லெய்தாவே - நன்னெறியின் |
|
|
| 89. |
மண்ணிற்
புகழுருவாய் வாழ்வதற்கும் வாழுநர்
விண்ணிற்போய்த் தேவுருவாய் மேவுதற்கும் - எண்ணியுனைக் |
|
|
| 90. |
கொண்டுபுகழ்
கொண்டவர்க்கே கூடுமுனைக் கூடாத
தொண்டருக்குத் தென்பாலே தோன்றுமால் - தண்டமிழே |
|
|
| 91. |
ஈங்குனது
சங்கத்தா லீச ருயர்ந்தாரோ
ஓங்குமவ ரானீ யுயர்ந்தாயோ - பூங்கமல |
|
|
| 92. |
வீடாளும்
வாணியங்கை மேலே யிருந்தாயோ
ஏடாக வுன்மே லிருந்தாளோ - ஆடரவத் |
|
|
| 93. |
தாழ்பாய
லாளரைநீ தானே தொடர்ந்தாயோ
சூழ்பாயோ டுன்னைத் தொடர்ந்தாரோ - வாழ்வே யென் |
|
|
| 94. |
றோதிமுனி
கேட்க வுனைமுருகர் சொன்னாரோ
சோதி யவரைநீ சொற்றனையோ - பேதியா |
|
|
| 95. |
நேசருனக்
கேபொருளாய் நின்றாரோ நீண்மதுரை
வாசருக்கு நீபொருளாய் வந்தாயோ - பாசமுறும் |
|
|
| 96. |
என்செய்தி
நீகண் டிரங்குவது நீதியல்லால்
உன்செய்தி நானோ வுரைசெய்வேன் - இன்சொல்லாய் |
|
|
| 97. |
கற்க
கசடறக் கற்பவை கற்றபின்
நிற்க வதற்குத் தகவென்ற - சொற்குள்ளே |
|
|
| 98. |
எல்லார்க்கும்
புத்தி யியம்பிக் கரையேற்ற
வல்லா யுனக்குரைக்க வல்லேனோ - சொல்லியவுன் |
|
|
| 99. |
ஈரடிக்குள்
ளேயுலக மெல்லா மடங்குமெனின்
நேரடிக்கு வேறே நிலனுண்டோ - ஓரடிக்கோர் |
|
|
| 100. |
ஆயிரம்
பொன்னிறைக்கு மையரை வீதியிலே
போயிரந்து தூதுசொல்லப் போக்கினோ - யாயிருந்தும் |