|
101.
|
மாண்பாயோர்
தூதுசொல்லி வாவென்பே னென்வருத்தம்
காண்பாயென் பெண்மதிநீ காணாதே - ஆண்பனைநற் |
|
|
| 102. |
பெண்பனையா
யாக்கினையாற் பெண்களிலே காரைக்கால்
வண்பதியா ரௌவையென வந்துதித்தாய் - நண்பார் |
|
|
| 103. |
திலகவதி
யாருடனே சென்மித்தாய் மாடக்
குலதவதி யானத்தர் கூடல் - பலதவஞ்சேர் |
|
|
| 104. |
மேனியார்
கண்டிகையும் வெண்ணீறுங் கண்டுருகும்
மானியார் தேசிகனா வந்துதித்தாய் - ஞானியார் |
|
|
| 105. |
துங்க
மகவாகத் தோன்றி வளப்பகைக்குஞ்
சிங்கடிக்குந் தாதையாய்ச் சீர்செய்தாய் - இங்குநீ |
|
|
| 106. |
பெண்களெல்லாம்
வாழப் பிறந்தமையா லென்மனத்திற்
புண்களெல்லா மாறப் புரிகண்டாய் - ஒண்கமலத் |
|
|
| 107. |
தன்னந்
தனைவிடுப்பே னன்னந்தா னங்கவரை
இன்னந்தான் கண்டறியா தென்பரே - மன்னெந்தாய் |
|
|
| 108. |
அப்பாலோர்
வண்டை யனுப்பி னவர்காமம்
செப்பாதே யென்றாற் றிகைக்குமே - தப்பாது |
|
|
| 109. |
மானைப்போய்த்
தூதுசொல்லி வாவென்பேன் வல்லியப்பூந்
தானைப் பரமற்பாற் சாராதே - ஏனைப்பூங் |
|
|
| 110. |
கோகிலத்தை
நான்விடுப்பேன் கோகலமுங் காக்கையினம்
ஆகி வலியானுக் கஞ்சுமே - ஆகையினால் |
|
|
| 111. |
இந்தமனத்
தைத்தூதா யேகென்பே னிம்மனமும்
அந்தமனோ தீதர்பா லண்டாதே - எந்தவிதம் |
|
|
| 112. |
என்றென்
றிரங்கினே னென்கவலை யெல்லாம்பொற்
குன்றனையா யுன்னுடனே கூறுகேன் - சென்றாலும் |
|
|
| 113. |
பண்ணிய
பத்தொன் பதினா யிரத்திருநாற்
றெண்ணியதொண் ணூற்றொன் றெனுந்தொடையாய் - நண்ணி |