பக்கம் எண் :

தமிழ்விடுதூது25


114.

ஒருதொடை வாங்கி யுதவாயோ வோர்சே
விருதுடை யார்க்குநீ வேறோ - தருமிக்கே
 
115. ஓர்வாழ்க்கை வேண்டி யுயர்கிழிகொள் வான்கொங்கு
தேர்வாழ்க்கை யென்றெடுத்த செய்தியும் - கீரன்
 
116. இசையா வகையி னியம்பினா னென்றே
வசையாடித் தர்க்கித்த வாக்கும் - இசையான
 
117. பாட்டுக் கிரங்கியொரு பாணனுக்குச் சேரலன்மேற்
சீட்டுக் கவிவிடுத்த சீராட்டும் - பாட்டியலில்
 
118. நாத்திரமா மேவுபொரு ணன்றா வறுபதெனும்
சூத்திரமாப் பாடியரு டோற்றமும் - மாத்திரமோ
 
119. உன்னோ டவர்விளையாட் டொன்றோ வடமதுரைக்
கந்நேர முன்பிறகே யார்வந்தார் - மன்னவன்மேற்
 
120. காரியார் நாரியார் கண்டகவி யைப்பகிர
வாரியிலாக் கானகத்தில் வந்தவரார் - நாரினொடும்
 
121. போற்றியுறும் பத்திரற்காப் போந்து கிழவுருவில்
தோற்றி விறகு சுமந்தவரார் - தேற்றியவற்
 
122. கீயரிய பொற்பலகை யிட்டவரார் மற்றவன்றன்
நேயமனை விக்கெதிரா நேர்ந்தவளைப் - போயவையில்
 
123. தள்ளியிசை தாபிக்கத் தக்கவரார் தென்மதுரைக்
குள்ளிருந்த சொக்கருனக் குள்ளன்றோ - எள்ளி
 
124. வடமொழியில் வேத வசனமே யீசர்
திடமொழியா மென்பார் சிலரே - அடரும்
 
125. பரசமய கோளரியாய்ப் பாண்டிநா டெங்கும்
அரசமய நீநிறுத்து மந்தாள் - விரசுநீ
 
126. ஆதிக்கண் வையையில்வே தாகமத்தைத் தாபித்தாய்
சோதிக்கி னேடகமே சொல்லாதோ - வேதத்தே