| 127.
|
வாதவனங்
கண்டா தடைத்தகத வந்திறந்தாய்
வேதவனங் கண்டால் விளம்பாதோ - வேதம் |
|
|
| 128. |
அமிழ்தினுமிக்
கென்னுமுனிக் கன்பருனைச் சொன்னார்
தமிழ்முனியென் னும்பேர்தா ராதோ - தமிழால் |
|
|
| 129. |
அறம்பொரு
ளின்பம்வீ டாரணர்சொன் னாரத்
திறம்பரமர் வாக்கேசெப் பாதோ - மறந்திடலில் |
|
|
| 130. |
கற்பலகை
யோதுமறை காணார்கீழ் நிற்கவுநீ
பொற்பலகை மேலிருந்தாய் போதாயோ - தற்பரரோ |
|
|
| 131. |
டெண்ணிறந்த
வாசியழைத் திட்டாய் சதுர்வேதப்
பண்ணிறைந்த வாசி பகராதோ - அண்ணலார் |
|
|
| 132. |
தென்பா
லுகந்தாடுஞ் செய்தியெல்லா முன்னிடத்தில்
அன்பாலென் றப்பாலு மாரறியார் - உன்பேர் |
|
|
|
133.
|
பழியார்
திசைச்சொல்லார் பன்னார் திருவாய்
மொழியார் குழறி மொழிவார் - அழியா |
|
|
| 134. |
உருவால
வாயிருக்கு மோதரிய முத்தித்
திருவால வாயிருக்குஞ் செல்வர் - ஒருமால் |
|
|
| 135. |
வடமதுரை
யேறுமுன்னே வந்தவடி வென்னத்
தடமதுரை மீனுயர்ந்த தாணு - படர்தீர்க்குஞ் |
|
|
| 136. |
சத்திபுரத்
தோர்பாற் றழைத்துமகிழ்ந் தோர்சீவன்
முத்திபுரத் தோர்பான் முளைத்தெழுந்தோர் - அத்திசைபோல் |
|
|
| 137. |
ஆங்கோ
ரிருநான் கயிரா வதஞ்சுமக்கும்
பூங்கோயிற் குள்ளுறைந்த புண்ணியனார் - பாங்காம் |
|
|
| 138. |
இடம்பவன
மீதாக விந்திரன்வந் தேத்துங்
கடம்பவன மீதிலுறை காந்தர் - அடும்பேர் |
|
|
| 139. |
அலகம்
பரிக்கு மரியார் முடிவேய்ந்
துலகம் பரிக்குமுறை யுள்ளார் - பலநாளும் |