|
140.
|
நின்றவூர்ப்
பூசலார் நீரடிவெ லாநினைந்து
குன்றுபோ லேசமைத்த கோயிலும் - நன்றிதரும் |
|
|
| 141. |
தாயான
கங்கைமுடி தாள்குளிரக் கண்ணப்பர்
வாயா லுமிழ்ந்ததிரு மஞ்சனமுந் - தூயமழைத் |
|
|
| 142. |
துன்பார்
திருக்குறிப்புத் தொண்டர் துணித்துறையில்
வன்பா யளித்தபரி வட்டமும் - இன்பாத் |
|
|
| 143. |
தணிவரிய
மானக்கஞ் சாறனார் சாத்தும்
மணிமுடிசூழ் பஞ்ச வடியும் - அணிவிடையார் |
|
|
| 144. |
காமன்பான்
முன்சேந்த கண்போல மூர்த்தியார்
தாமன்பான் முன்சேர்த்த சந்தனமும் - பூமன்போற் |
|
|
| 145. |
காக்குமரி
புனைந்த கண்மலருங் காதலொடு
சாக்கியர்தாஞ் சாத்தியபூந் தண்மலரும் - போக்கியமா |
|
|
| 146. |
ஆக்கிய
மாற னமுதுஞ் சிறுத்தொண்டர்
மாக்கறியுந் தாயர்தரு மாவடுவும் - நீக்கரிய |
|
|
| 147. |
காரா
ரிரவிற் கணம்புல்லர் தம்முடிமேற்
சீராக வேற்றியசெந் தீபமும் - ஆரால் |
|
|
| 148. |
அமைத்து
வணங்கலுறு மங்கணர்க்குப் பூசை
சமைத்து வணங்கத் தகுமோ - உமைக்கன்பர் |
|
|
| 149. |
அற்சனைபாட்
டேயாமென் றாரூரர்க் காதியிலே
சொற்றமிழ் பாடுகெனச் சொன்னமையாற் - சொற்படியே |
|
|
| 150. |
செய்தாய்நால்
வேதந் திகைத்தொதுங்கப் பித்தனென்று
வைதாய்நீ வைதாலும் வாழ்த்தாமே - மெய்தான் |
|
|
| 151. |
இருந்தமிழே
யுன்னா லிருந்தே னிமையோர்
விருந்தமிழ்த மென்றாலும் வேண்டேன் - வருந்தினன்மால் |
|
|
| 152. |
வெல்லானை
தின்ற விளங்கனியா னேன்விரகக்
கல்லானை தின்ற கரும்பானேன் - நல்லவரைத் |