பக்கம் எண் :

தமிழ்விடுதூது28


153. தேடுநிழற் சிந்தனையிற் றேம்பினேன் வெம்பனியால்
வாடிய செந்தா மரையொத்தேன் - ஓடமிசைக்
 
154. கொள்ளம்பூ தூரவெள்ளக் கொள்ளைகடந் தாயென்மால்
வெள்ளங் கடத்திவிட வேண்டாவோ - தள்ளென்று
 
155. மாறிட்ட சாக்கியரை வன்கழுவே றச்செய்தாய்
சீறிட்ட வேளையது செய்யாயோ - நீறிட்டே
 
156. அங்கரும்பின் கூனொழித்தா யன்றுவழு திக்குமதன்
செங்கரும்பின் கூனொழியச் செய்யாயோ - அங்கமுறு
 
157. வெப்புநோய் தீர்த்தாயவ் வேந்தனுக்கென் வெவ்விரக
வெப்புநோய் தீர்க்க விரும்பாயோ - தப்பலவே
 
158. சாக்கிய ரிட்டநஞ்சு தன்னையமு தாக்கினையின்
றாக்கிய நஞ்சையமு தாக்காயோ - நீக்கரிய
 
159. வெந்தீக்குள் ளேகிடந்தும் வேவாயென் பார்காமச்
செந்தீச் சுடாதிருக்கச் செய்யாயோ - வந்துகொங்கில்
 
160. அப்பனியால் வாடாதே யார்க்குத் துயரொழித்தாய்
இப்பனியால் வாடா திரங்காயோ - அப்பரை
 
161. மைக்கடல்கொல் லாதபடி வன்கன் மிதப்பித்தாய்
அக்கடல்கொல் லாமலுற வாக்காயோ - மிக்குயர்ந்த
 
162. மன்றிற் பனைவடிவ மாற்றினா யப்பனைமேல்
அன்றிற்புள் வேறொருபுள் ளாக்காயோ - தொன்றுதொட்டுத்
 
163. தென்பொதியிற் சாந்தினொடு தென்றலுற வாய்வந்தாய்
அன்புறவென் னோடுமுற வாக்காயோ - முன்பிருந்து
 
164. பாடுமிசை யெல்லாமுன் பாவையராச் சேர்த்தாயென்
னோடுமுனி யாதிருக்க வோதாயோ - பாடலாற்
 
165. சின்னமொடு காளஞ் சிவிகைபந்தர் முத்தடைந்தாய்
பொன்னே சுடாதணியப் பூட்டாயோ - முன்னிறந்தாள்