| 166.
|
அங்கத்தைப்
பூம்பாவை யாக்கினா யாதலினென்
அங்கத்தைப் பூம்பாவை யாக்காயோ - மங்கத்தான் |
|
|
| 167. |
மாய்ந்தாலு
மாமுதலை வாய்ப்பிள்ளை யைப்படைத்தாய்
மாய்ந்தாலும் பின்படைக்க வல்லையே - ஏய்ந்தவுரை |
|
|
| 168. |
செய்தாளென்
றென்சொல் செவியோர்ந்து செல்வாயிங்
கெய்தாம லங்கிருக்க வெண்ணாதே - பொய்தீரத் |
|
|
| 169. |
தேசிவருஞ்
சொக்கருக்கே சென்றிருந் தாங்கவரைப்
பேசிவருந் தூது பிறிதுண்டோ - நேசமொடு |
|
|
| 170. |
தைவரினுங்
காட்டத் தகாதாரைத் தாதையர்க்குக்
கைவிரலாற் காட்டியருள் காளையும் - தெய்வவெள்ளிப் |
|
|
| 171. |
பூதர
வானவரைப் போற்றமுயன் றையாற்றில்
ஆதரவாய்க் கண்ட வரசரும் - நாதர் |
|
|
| 172. |
அளந்தருள்செம்
பொன்னைமணி யாற்றிலிட் டாரூர்க்
குளந்தனிலே தேடியருள் கோவும் - வளந்திகழும் |
|
|
| 173. |
காளத்தி
யில்வந்த காட்சிகயி லாயத்து
நீளத்தான் சொற்றவனு நீயன்றோ - கேளப்பால் |
|
|
| 174. |
அம்மைதமக்
கில்லாதா ரம்மைதா மாவிருந்தார்
அம்மையென்று முன்னுரைத்த வம்மையாய்த் - தம்மெதிரே |
|
|
| 175. |
வெள்ளானை
மேற்கொண்ட வேந்தர் வரவிடுத்த
வெள்ளானை மேற்கொண்ட வித்தகராய்த் - தள்ளாது |
|
|
| 176. |
விஞ்சுவரால்
வண்ணானை வெண்ணீற்ற ரென்றுபணிந்
தஞ்சலிசெய் தாட்செய்த வன்பராய்ச் - சஞ்சரியாத் |
|
|
| 177. |
தென்கையி
லாயவரைச் செல்வர்பாற் சென்றாயே
உன்கையி லாகாத தொன்றுண்டோ - என்கையால் |
|
|
| 178. |
ஆய
மவள்பாகத் தன்பரு முக்கிரராம்
சேயும் புரந்திருக்குந் தென்மதுரை - வாயினிய |