பக்கம் எண் :

தமிழ்விடுதூது30


179. செவ்வழியே செல்வாய்நீ செல்வழியி னல்வழிதான்
எவ்வழி யென்றா லியம்பக்கேள் - எவ்வழியும்
 
180. வெல்வா யுனைநினைந்து வேயுறு தோளியென்று
செல்வார்தங் காரியஞ்சித் திக்குமே - செல்வாய்
 
181. தடையுண்டோ வையாறு தன்னிலே பொன்னி
இடைவிலங்கச் சென்றதறி யேனோ - இடையிலே
 
182. பாலைநில நெய்தலாப் பண்ணினா யின்னுமதைச்
சோலைநில மாக்குவைநான் சொல்லுவதென் - மேலானார்
 
183. கூறும் பொதிசோறு கொண்டு வரினுனக்கு
வேறும் பொதிசோறு வேண்டுமோ - வீறாகக்
 
184. கற்பார் பொருள்காணார் காசுபணங் காணிலுனை
விற்பா ரவர்பானீ மேவாதே - கற்றாரை
 
185. எள்ளிடுவார் சொற்பொருள்கேட் டின்புறார் நாற்போலச்
சள்ளிடுவார் தம்மருகே சாராதே - தெள்ளுதமிழ்ப்
 
186. பாயிரமுன் சொன்ன படிபடியா மற்குழறி
ஆயிரமுஞ் சொல்வார்பா லண்டாதே - ஆய்தருநூல்
 
187. ஓதி யறியாத வொண்பே தையருடனே
நீதி முறையா நிகழத்துநூல் - பேதைமையாங்
 
188. காணாதாற் காட்டுவான் றான்காணான் கண்ணெதிரே
நாணா திராதே நவிலாதே - வீணாக
 
189. ஆற்றி னளவறிந்து கல்லா தவையஞ்சுங்
கூற்றினர்பா லேகாதே கூடாதே - போற்றாரை
 
190. வேண்டாதே கேடில் விழுச்செல்வங் கல்வியென்று
பூண்டாய்நீ தானே பொருளன்றோ - ஆண்ட
 
191. வலவா நலவா வடுதுறையி லுன்போல்
உலவாக் கிழிபெற்றா ருண்டோ - நலவிருப்ப