பக்கம் எண் :

தமிழ்விடுதூது31


192.

தாக்கவரு செங்கலைப்பொன் னாக்கினாய் மண்முழுதும்
மாக்கனக மாக்கிவிட வல்லையே - நோக்குபுகார்
 
193. பாடியதோர் வஞ்சிநெடும் பாட்டாற் பதினாறு
கோடிபொன் கொண்டதுநின் கொற்றமே - தேடியருள்
 
194. நல்லார்கட் பட்ட வறுமையி னின்னாதே
கல்லார்கட் பட்டதிருக் கண்டாயே - கல்லார்பால்
 
195. ஏகாதே யன்பிலா ரிந்திரன்போல் வாழ்ந்தாலும்
போகாதே யங்கே புசியாதே - மாகவிஞர்
 
196. தாமின் புறுவ துலகின் புறக்கண்டு
காமுறுவர் கற்றறிந் தாரென்றும் - மாமகிமை
 
197. சேர்ந்ததுன்பா லன்றோ திருப்பாற் கடலமுதம்
ஆர்ந்தவர்க்கல் லாதுபசி யாறுமோ - சேர்ந்துன்னை
 
198. நம்பாதார் வீதி நணுகாதே நல்லார்கள்
தம்பா லிருந்து தரித்தேகி - வம்பாகப்
 
199. பின்போ யமனோடப் பேர்ந்தோடும் வையையிலே
முன்போ யெதிர்போய் முழுகியே - அன்போடே
 
200. தாழ்ந்துநீள் சத்தந் தனைக்கற்றா ருள்ளம்போல்
ஆழ்ந்த வகழி யகன்றுபோய்ச் - சூழ்ந்துலகில்
 
201. மேன்மே லுயர்ந்தோங்கு வேதம்போன் மேலாக
வான்மே லுயர்ந்த மதில்கடந்து - போனால்
 
202. மிருதிபுரா ணங்கலைபோல் வேறுவே றாக
வருதிரு வீதிசூழ் வந்தே - இருவினையை
 
203. மோதுஞ் சிவாகமம்போன் முத்திக்கு வித்தாக
ஓதுந் திருக்கோயி லுட்புகுந்து - நீதென்பால்
 
204. முன்னே வணங்கி முறையினபி டேகமுனி
தன்னேயம் போலாந் தளவிசையும் - தன்னடைந்து