பக்கம் எண் :

தமிழ்விடுதூது32


205.

தேறும் படிவர் சிவலோகஞ் சேர்ந்திருக்க
ஏறும் படிநிறுத்து மேணிபோல் - வீறுயர்ந்த
 
206. கோமேவு கோபுரமுங் கூடலின்மேன் முன்னொருநாள்
மாமேகஞ் சேர்ந்ததுபோன் மண்டபமும் - பூமேவும்
 
207. மட்டளையும் வண்டெனப்போய் மாளிகைப் பத்தியறைக்
கட்டளையுங் கண்டு களிகூர்ந்தே - இட்டமணிச்
 
208. சிங்கா தனத்திற் சிறந்ததிரு வோலக்கம்
எங்கா கிலுமொருவர்க் கெய்துமோ - பைங்கழல்சூழ்
 
209. தேங்கமலத் தேசு தெரிசனஞ் செய்தவர்க்கே
பூங்கமலக் கண்கொடுத்த புத்தேளும் - ஓங்கமல
 
210. மையி லடியில் வணங்காத் தலையொன்றைக்
கையி லளித்த கடவுளும் - மொய்யிழந்த
 
211. மானந் தனக்கு வகுத்தகடம் பாடவிக்கு
மானந் தனைவகுத்த வானவனுந் - தேனங்
 
212. கணிமலர்த்தா ணெஞ்சூ டழுத்தியழுத் தாதே
மணிமுடிக ணீக்கி வணங்கக் - கணநாதர்
 
213. ஓதுதுனி யோடுசின முற்றபகை செற்றமுரட்
போத முனிவர் புடைசூழத் - தீதில்
 
214. அரிய திசைப்பால ரத்தமுத றாங்கித்
தெரிசனக்கண் பார்த்தேவல் செய்யப் - பரவியே
 
215. முன்னிருவ ரெண்மரொடு மொய்த்த பதினொருவர்
பன்னிருவர் நின்று பணிசெய்ய - முன்னே
 
216. நதிக ளெனக்கண்டு நந்திபிரம் போங்க
உதகவிரு பாலி னொதுங்கிப் - பதினெண்
 
217. குலத்தேவர் தம்மகுட கோடிபதி னெட்டு
நிலத்தோர் முடியா னெரிய - நிலத்தே