| 218.
|
செருக்குஞ்
சினேகமுற்ற தேவி யுடனே
இருக்குஞ் சினகரத்து ளெய்திப் - பொருக்கெனப்போய் |
|
|
| 219. |
எந்தாயென்
றேத்து மிடைக்காடன் பின்போன
செந்தா மரைபோற் றிருத்தாளும் - வந்துமனந் |
|
|
| 220. |
தேறிக்
கழுத்தரியத் தென்பாண்டி நாடனுக்கு
மாறித் திரும்பு மணிக்குறங்குஞ் - சீறிப் |
|
|
| 221. |
பணிக்கற்கு
மாறாப் படையுடைவாள் சேர்த்து
மணிக்கச் சுடுத்த மருங்கும் - துணிக்கமையத் |
|
|
| 222. |
தொண்டுபடு
வந்தி சொரிந்திடும்பிட் டள்ளிபள்ளி
உண்டுபசி தீர்ந்த வுதரமும் - அண்டுமொரு |
|
|
| 223. |
தாய்முலைப்பா
லுண்டறியாத் தாம்பன்றிக் குட்டிகளின்
வாய்முலைப்பா லூட்டியபூண் மார்பமுந் - தூயமுடி |
|
|
| 224. |
ஆணிக்
கனகத் தழுத்த வழுதிக்கு
மாணிக்கம் விற்ற மலர்க்கையும் - காணிக்காப் |
|
|
| 225. |
பூம்படலை
யாத்திப் புனைமலரைப் பூணாமல்
வேம்பலரைப் பூண்ட வியன்புயமும் - ஓம்புகொடி |
|
|
| 226. |
வாதிற்
கரிக்குருவி வாழ்தற் குபதேசம்
காதிற் புகன்ற கனிவாயும் - தீதில்சொல் |
|
|
| 227. |
வாயிலா
நீயிருந்து வாழும் படியுனக்குக்
கோயிலாத் தந்த குழைக்காதும் - போய்வணிகப் |
|
|
| 228. |
பெண்ணீராள்
கண்ணீர் பெருகத் தழுவித்தம்
கண்ணீரா லாற்றியருள் கண்களும் - தெண்ணீரார் |
|
|
| 229. |
பண்சுமந்த
பாட்டினுக்கும் பாவைதந்த பிட்டினுக்கும்
மண்சுமந்த சோதி மணிமுடியும் - கண்சுமந்து |
|
|
| 230. |
கண்டுகளி
கூர்ந்து கசிந்துகசிந் துள்ளுருகித்
தொண்டுசெய்து தாண்முடிமேற் சூடியே - மண்டும் |