| 231.
|
உடுக்குலந்தங்
கோக்குலமென் றுற்றறிந்தா லென்ன
அடுக்கிலங்கு தீபமெதி ராகக் - கடுத்திடேல் |
|
|
| 232. |
வெங்கதிருண்
டுன்குலத்து வெண்மதியுண் டென்னல்போல்
தங்கவா ரத்தீபந் தாமசையத் - துங்கவிடை |
|
|
| 233. |
ஏங்குமொரு
மீனுயர்த்தி னெங்கிருப்பே னென்பதுபோல்
ஆங்கிடப நீப மழன்றாட - நீங்கா |
|
|
| 234. |
தருடா
ம்ருகத்துரு வானார்க் குவந்தே
புருடா ம்ருகத்தீபம் போற்ற - மருவார் |
|
|
| 235. |
வருகுலத்தார்
பானு வரனடுக்குற் றென்ன
அருகுலவுந் தட்ட தசைய - இருசுடர்க்கும் |
|
|
| 236. |
சொக்கருனைத்
தானே சுடரென்று காட்டுதல்போல்
அக்கரா லத்தியொளி யாய்விளங்கத் - தக்கவளோ |
|
|
| 237. |
டெற்கும்
பயந்தொளித்தா ரென்றுகங்கை தேடுதல்போற்
பொற்கும்ப தீபமெதிர் போய்வளையச் - சொற்குருகும் |
|
|
| 238. |
அற்பூரத்
தொண்டர்க் கருண்முத்தி யீதெனல்போற்
கற்பூரத் தட்டிற் கனல்வாய்ப்பப் - பொற்பாக |
|
|
| 239. |
நங்குலத்தும்
வந்துதித்தார் நாதரென்று பானுமகிழ்ந்
தங்குறல்போற் கண்ணாடி யங்கணுற - இங்கரசர் |
|
|
| 240. |
எங்குலத்தா
ராயினா ரென்றுபிறை தோற்றுதல்போல்
துங்கமுடி மேற்குடைவெண் சோதிவிடப் - பொங்கியெழும் |
|
|
| 241. |
முந்துகடல்
வெண்டிரைகண் முன்னேமா மிக்காக
வந்தனபோல் வெண்சா மரையிரட்ட - விந்தைசெயும் |
|
|
| 242. |
ஆடரவச்
சித்தரிவ ராதலினா லாலவட்டம்
நீடரவம் போலவெதிர் நின்றாட - நாடகலா |
|
|
| 243. |
வாலநறுந்
தென்றனம் மன்னரென்று காண்பதுபோற்
கோல விசிறி குளிர்ந்தணுகக் - காலைத் |