|
244.
|
திருவனந்தன்
முன்னாகச் சேவிக்குங் காலத்
துருவனந்த தேவ ருடனே - மருவியெதிர் |
|
|
| 245. |
போற்றுவாய்
நீயும் புரோகிதரை முன்னனுப்பித்
தோற்றரவு செய்து துதித்ததற்பின் - ஆற்றல் |
|
|
| 246. |
அரிய
சிவாகமத்தோ ராதிசைவர் தம்பால்
உரிய படையா வொதுங்கி - அருமையுடன் |
|
|
| 247. |
மூவர்
கவியே முதலாங் கவியைந்தும்
மூவராய் நின்றார்தம் முன்னோதி - ஓவாதே |
|
|
| 248. |
சீபாத
மெண்ணாத தீயவினைப் பாவிசெய்த
மாபாத கந்தீர்த்த மாமருந்தைத் - தீபமணிப் |
|
|
| 249. |
பைந்நாகஞ்
சூழ்மதுரைப் பாண்டியனே பாரமணிக்
கைந்நாகஞ் சூழ்கோயிற் கண்மணியே - மன்னாக |
|
|
| 250. |
மைக்கட்
கரும்பை மருவிப் பிரியாத
முக்கட் கனியே முழுமுதலே - மிக்கபுனற் |
|
|
| 251. |
கங்கா
நதிக்கிறையே கன்னித் துறைக்கரசே
சிங்கா தனத்துரையே செல்வமே - எங்கோவே |
|
|
| 252. |
நாடவிளை
யாடிவந்த நற்பாவை போலடியார்
கூடவிளை யாடிவந்த கோமானே - தேடரிய |
|
|
| 253. |
சிந்தைமகிழ்ந்
தன்புடையார் தேடியநா ளோடியெதிர்
வந்தவிளை யாட்டினிமேல் வாராதோ - வந்தருளால் |
|
|
| 254. |
பாவும்
புகழ்சேர் பழிக்கஞ்சி யென்றுலகில்
மேவும் பெயரினிமேல் வேண்டாவோ - ஆவலினால் |
|
|
| 255. |
புக்குவந்தார்
தம்மேற் பொடிபோட் டுளமயக்கிற்
சொக்கலிங்க மென்றெவருஞ் சொல்லாரோ - இக்கணைத்த |
|
|
| 256. |
அங்கைவே
டானே யரசாள வுஞ்சிறிய
மங்கைதனைக் கோட்டிகொளல் வல்லமையோ -
கங்கையெலாம் |