பக்கம் எண் :

தமிழ்விடுதூது36


257. நல்லமைக்கண் ணூடுவர நல்குதியே னங்கையெல்லாம்
வல்லசித்த ரென்றழைக்க மாட்டாளே - நல்லவர்போல்
 
258. மைக்குவளைக் கண்ணி வளைகவர்ந்து மங்கையர்தங்
கைக்குவளை விற்கக் கணக்குண்டோ - திக்குவளை
 
259. தோட்டாரும் வேம்பாய்த் தொடர்ந்துதொடர்ந் தேயொருதார்
கேட்டாரும் வேம்பாகக் கேட்டோமே - நாட்டமுற
 
260. வேளையெரித் தாய்க்கியல்போ மின்னார் கலைகவர்தல்
காளை யிடையிருந்து கற்றதோ - மீளாது
 
261. சென்றிலகு நாரையன்று சென்றசிவ லோகத்தே
இன்றெனையங் கெய்தவிட லாகாதோ - அன்றியழற்
 
262. குன்றே விருத்த குமார ரிளம்பாலர்
என்றேயோர் பெண்வீட் டிருக்கலாஞ் - சென்றொருநாள்
 
263. பொன்னனையாள் வீடும் புகுந்திருக்க லாமெனினென்
பொன்னனையாள் வீடும் பொருந்தாதோ - என்னுமொழி
 
264. எல்லாந் திருச்செவியி லேறும் படியுரைக்க
வல்லாயுன் போலெவர்க்கு வாய்க்குமே - நல்லாள்
 
265. கருணைவிழி யாளங் கயற்கண்ணி தன்னோ
டருள்புரிய வாழ்ந்திருக்கு மையர் - திருமதுரை
 
266. தானே சிவராச தானியென்று வீற்றிருந்தால்
தேனேநம் பாக்கியத்தின் செய்தியே - ஆனமையால்
 
267. அந்தரலோ கத்தின்மே லானதிரு வாலவாய்ச்
சுந்தர மீனவனின் சொற்படியே - வந்து
 
268. துறவாதே சேர்ந்து சுகாநந்த நல்க
மறவாதே தூதுசொல்லி வா.

தமிழ் விடுதூது முற்றிற்று