பக்கம் எண் :

கட
151
12. பகற்குறி இடையீடு

 
       அஃதாவது,  பகற்குறிக்கண்  வந்த  தலைமகன்   குறிக்கட்    செல்லாது
இடையீடுபட்டுப் போதல்.

  1`விலக்கல் சேறல் கலக்க மென்றாங்
கிகப்பின்மூ வகைத்தே பகற்குறி இடையீடு`

     என்னுஞ்   சூத்திரவிதியாற்   பகற்குறி    இடையீடு    மூவகைப்படும்.

இறைவனைப் பாங்கி குறிவரல் விலக்கல் :
  புனமும் பசுந்தினைச் செங்குர லேந்தும் புகன்றகிள்ளை
இனமுங் குழீஇவந் திறைகொள்ளு மாலிறை யார்வளையும்
மனமுங் கவர்வெற்ப வாணன்தென் மாறை மடப்பிடியும்
அனமுந் தொழுநடை பாற்பல கால்வரு மன்னையுமே.

      (இ-ள்.) தலைவி  கையின்கண்  நிறைந்த  வளையும்   அவள்   மனமும்
இரண்டையுங்  கவர்ந்து  கொள்ளும்  வெற்பனே!  இப்புனமும் பசிய தினையினது
முற்றிச்  சிவந்த  கதிரை யேந்தி நிற்கும்; இவள் சொல்லைப்போற் சொல்லப்பட்ட
கிளியினமும்  கூடிவந்து தங்கும்; வாணன் தென்மாறை நாட்டு மடப்பதோடு கூடிய
பிடியும்  அன்னமும்  தொழும்  நடையினை  யுடையாள் பக்கல்   அன்னையும்
பல்கால்வரும் என்றவாறு.

      எனவே,   தலைவியும்  புனம்விட்டு  நீங்கத்தகாதாளல்லள்,  நீயும்  இங்கு
வாரற்க எனக் குறிப்பாற் பெறப்பட்டது.

      குரல் - கதிர்;  குழிஇ  வருதல் - பலபல  தொகுதியாய்க்  கூடி  வருதல்.
இறைகொள்ளுதல் - தங்குதல். இறை: கை; ஆகுபெயர். தொழுநடை:  ஆகுபெயர்.
கவர்தல் - கொள்ளுதல்.
(156)    
இறைவியைப் பாங்கி குறிவரல் விலக்கல் :
  நந்துசுற் றுங்கடல் ஞாலமெல் லாம்புகழ் நாமன்வளர்
சற்றுசுற் றுங்கொங்கை மங்கையர் வேள்சஞ் சரீகநறை
வந்துசுற் றுந்தொங்கல் வாணன்தென் மாறை வரையின்மலர்க்
கொந்துசுற் றுங்குழ லாய்செல்லல் நீயக் குளிர்பொழிற்கே.

      (இ-ள்.) சங்கு  சுற்றுங்  கடல்சூழ்ந்த வுலகமெல்லாம் புகழப்பட்ட பெயரைப்
படைத்த    நாட்குநாள்    வளருந்   தகைமையை   யுடைய   சந்தனந்திமிருங்
கொங்கையையுடைய  மங்கையர்க்கு  வேளையொத்த சஞ்சரீகம் மணத்தால் வந்து
சுற்றுந் தொங்கலை யணிந்த வாணன்

அகப்பொருள் விளக்கம், களவியல் - 38.