|
|
கொண டகறலும், உன்னுடன் சொல்கின்ற சொற்களுமாகிய இவையித்தனையும் பின் மறவாதொழிவாயாக என்றவாறு.
|
| சின்னாண் மலர்க்குழல் காரண மாச்செவ்வி பார்த்துழன்று பன்னா ளுரைத்த பணிமொழி நோக்கிப் பழிநமக்கீ தென்னா திடைப்பட்ட வென்னிலை நீமற வேலிறைவா தன்னாக மெய்ப்புக ழான்தஞ்சை வாணன் தமிழ்வெற்பிலே.
|
`நல்லவர்` என்புழி, `எங்கே` என வருவித்து உரைக்க. `அராவல்குல்`: உவமைத்தொகை. ஓகாரம்: அசைநிலை. உசாதல் - வினாதல். அயர்ச்சி - தளர்ச்சி. என்னையர்: ஈன்றோர். ஆணை - ஏவல். அயர்தல் - மறத்தல். இதண் - பரண். |
(159) |
இத்துணையும் ஆறாநாட் செய்தியென்றுணர்க.
|
பின்னாள் நெடுந்தனை குறிவயின் நீடுசென் றிரங்கல்: |
பின்னாள் நெடுந்தகை குறிவயின் நீடுசென்று இரங்கல் என்பது, ஏழாநாள் தலைவன் குறியிடமாகிய மாதவிப்பந்தரிடத்து வந்து நீட்டித்து நினைந்திரங்கல்.
|
| மான்காள் நிகரில் மடமயில் காள்தஞ்சை வாணன்வெற்பில் தேன்காள் திரைமென் சிறைக்கிள்ளை காளென் தெருமரல்நோய் தான்கா ணியகொலிச் சந்தனச் சோலையைத் தன்னையின்றி யான்கா ணியகொல் எழுந்தரு ளாததின் றென்னுயிரே.
|
(இ-ள்.) மான்காள்! உவமையில்லாத மடப்பத்தையுடைய மயில்காள்! தஞ்சைவாணன் வெற்பிடத்திருக்கின்ற வண்டுகாள்! ஒழுங்காய் வருகின்ற மெல்லிய சிறகையுடைய கிளிகாள்! இன்று என்னுடைய சுழலும் வேட்கை நோயைத் தானறியவோ, இச்சந்தனச் சோலையிற் கரந்திருக்கின்ற தன்னை இன்று யான் தேடிக்காணவோ, என்னுயிர்போல்வாள் எழுந்தருளாதது என்றவாறு.
|
தெருமரல் - சுழற்சி. `சோலையை` என்புழி வேற்றுமை மயக்கம். உயிர்: ஆகுபெயர். |
(160) |
பின்னாள் நெடுந்தனை குறிவயின் நீடுசென் றிரங்கல்: |
தலைவன் வறுங்கள நாடி மறுகல் என்பது, தலைவி யில்லாத தினைப்புனத்தை நோக்கி வருந்துதல். |
| செங்கேழ் விழிக்கு மொழிக்கும் பகைதிருப் பாற்கடலும் பங்கே ருகமும் பயந்தன வாயினும் பைங்கிள்ளைகாள் சங்கேய் தடந்துறை சூழ்தஞ்சை வாணன் தரியலர்போல் எங்கே யினித்தங்கு வாரேனல் காத்திங் கிருந்தவரே.
|
(இ-ள்.) பைங்கிளிகாள்! செவ்வரி பொருந்திய விழிக்கும் மொழிக்கும் தாமரையும் திருப்பாற்கடலும் மாதரைப் பெற்றனவாயினும் பகையாயின |