|
|
வாதலால், தினைப்புனங் காத்திருந்தவர் சங்குபொருந்திய பெரிய வைகைத்துறை சூழ்ந்த தஞ்சைவாணன் தரியலர்போல் இன்று எங்கே தங்குவார் என்றவாறு.
|
இது மொழிமாற்று நிரனிறை.
|
| `ஆடவர்க ளெவ்வா றகன்றொழிவார் வெஃகாவும் பாடகமு மூரகமும் பஞ்சரமாய் - நீடியமால் நின்றா னிருந்தான் கிடந்தா னிதுவன்றோ மன்றார் மதிற்கச்சி மாண்பு`
|
என்றாற்போல, நிரனிறை மொழிமாறி நின்றது.
|
கேழ் - நிறம். பங்கேருகம் - தாமரை. இடமாயினதன்றி, பயந்ததின்றேயெனின், சீதை இலங்கையில் பொய்கைத் தாமரையிற் பிறந்தாளென்பது இராமர் கதையிற் கண்டுகொள்க. துறை - வைகைத் துறை. தரியலர் - பகைவர். ஏனல் - தினை. `கோடாப் புகழ் மாறன்` என்னுஞ் செய்யுளும், `வறுங்களநாடி மறுகல்` என்றே கொள்க. |
(161) |
குறுந்தொடி வாழுமூர் நோக்கி மதிமயங்கல்: |
குறுந்தொடி வாழும் ஊர் நோக்கி மதி மயங்கல் என்பது, தலைவியின் ஊர் தேடிச் சேறுமெனில், அறிந்திலம், என்று மதி மயங்கிக் கூறல்.
|
| பெறவரி தாலவன் பின்சென்ற நெஞ்சமும் பேணலர்க்கு மறவரி தானன்ன வாணன்தென் மாறை வரைப்புனஞ்சூழ் நறவரி தாழ்முல்லை நாண்மல ரோதி நகருமெனக் குறவரி தாமென்செய் வேனென்று சோருமென் னோருயிரே.
|
(இ-ள்.) அவளைப் பெறுதல் அரிதாயதுமன்றி அவள்பின்னே தொடர்ந்து சென்ற நெஞ்சமும் மீட்டு நாம் பெறவேண்டுமெனிற் பெறுதற்கு அரிதாயது; பகைவர்க்கு வீரம் பொருந்திய சிங்கத்தை யொத்த வாணன் தென்மாறை வரைப்புனஞ் சூழ்ந்த கள்ளால் வண்டு தாழப்பட்ட, முல்லை நாண்மலரை யணிந்த குழலையுடை யாளது நகரும் எனக்கு உறுதற்கரிதாதலான், என்செய்வேன் என்று என்னொப்பற்ற உயிர் சோராநிற்கும் என்றவாறு.
|
எனவே இதற்குச் செய்யுமா றறிந்திலேனென மதிமயங்கிக் கூறியவாறாயிற்று.
|
மதி - அறிவு. ஆல்: அசை. பேணலர் - பகைவர். மறவரி - வீரச்சிங்கம். சூழ்ந்த என்னும் பெயரெச்சம் `நகர்` என்னும் பெயர்கொண்டு |