பக்கம் எண் :

கட
16. வரைவு கடாதல்
194

 
அஃதாவது,       பாங்கி      தலைவனொடு      வரைவுவறி      வினாதல்.

  1`பொய்த்தல் மறுத்தல் கழறல் மெய்த்தலென்
றொருநால் வகைத்தே வரைவு கடாதல்`
என்னுஞ் சூத்திரவிதியால் வரைவுகடாதல் நான்கு வகைப்படும்.
வினவிய செவிலிக்கு மறைத்தமை விளம்பல்:
     வினவிய  செவிலிக்கு  மறைத்தமை  விளம்பல்  என்பது, முன்   வரைதல்
வேட்கையில்  தலைவி  அருமறை  செவிலி யறிந்தமை  கூறியவதனைத்  தோழி
தன்னைச்  செவிலி  வினவியதாகவும்,  அதற்குத்தான்  மறைத்துக்  கூறியதாகவும்
தலைவற்குக் கூறுதல்.

இக்கிளவி  முதல் `கவினழி புரைத்தல்` ஈறாகக  கூறிய கிளவிகள்  பலவற்றுள்ளும்
குறிப்பினானும் வெளிப்படையானும் வரைவு கடாவியவாறு கண்டு கொள்க.

  தளரா இளமுலை தாங்ககில் லாது தளரிடைகண்
வளராத தென்கங்குல் வாரா யெனத்தஞ்சை வாணன்வெற்பா
விளரார் திருநுத லன்னைக்கொர் மாற்றம் விளம்பியுய்ந்தேன்
உளரா மவர்வலை யுட்பட்டு வாழவ துணர்ந்தருளே.

     (இ-ள்.) தஞ்சைவாணன்  வெற்பனே! செவிலி என்னை  ஈங்கு வாராயென
அருகழைத்து,  எஞ்ஞான்றும்  இறுகிய   தன்மை   தளராத   இளமுலைகளைத்
தாங்கமாட்டாது  தளர்ந்த   இடையினை   யுடையாள்   கங்குலின்கண்   துயில்
கொள்ளாதது   என்னென்று   வினை,    வெளுப்பார்ந்த    திருநுதலையுடைய
அன்னைக்கு  ஒரு  சொல்  மறைத்துச்  சொல்லி  உய்ந்தேன்; எமக்குள்ளாராகிய
தாய்மார்  வலையுள்  அகப்பட்டு  யாங்கள்  உயிர்வாழ்தல் உணர்ந்தருள்வாயாக
என்றவாறு.

     தளரிடை - அன்மொழித்தொகை.           கண்வளர்தல்  -  துயிலுதல்.
கங்குல் - இரவு. விளரார்தல் - மகட்குத்  துயில்  வாராமையால்  யாது  நோயோ
என்று துன்பத்தால் திருநுதல்  வெளுத்தல்.  ஓர் மாற்றம் - தலைவி  துயிலிடைக் கனவுகண்டு வெருவி யெழுந்தாள். அவ்வச்சத்தினால் துயில் வாராதிருந்தாளென்னும
்மாற்றம்.   யான்   இங்ஙனம்   மறைத்துக்  கூறாவிடின்   என்னுயிர்க்கு   ஏதஞ்
செய்வரென்பது  தோன்ற,  `உய்ந்தேன்`  என்று  கூறியவாறு. எனவே, குறிப்பால்
வரைவு   கடாதலாயிற்று.  `தாங்கி நில்லாது`  என்று  பாடமோதி,  தளரிடைக்குத் துவளுமிடையென்று பொருளுரைப்பாரு முளர்.
(228)    

1. அகப்பொருள் விளக்கம், களவியல் - 49.