பக்கம் எண் :

கட

தஞ்சைவாணன் கோவை

20

 

வாயிற்று. `வளரட்டாவதானி` என்றது ஏதுப் பொருண்மைக் கண் வந்த
வினைத்தொகை.

2`தோன்றிற் புகழொடு தோன்றுக அஃதில்லார்
தோன்றலில் தோன்றாமை நன்று`

என்னும் திருவள்ளுவர் கூறிய திருக்குறளினது பயனுக்கு உதாரணம் இவன்  என்பது
பெற்றாம்.முன்னை நல்வினையுண்மையாற் பிறந்த நுண்ணறிவான் இவன் காண்டலாற்
சங்கையின்றென்பது   தோன்ற,  `காணும் அகப்பொருள்,`  என  மாறிப்  பிறர்க்குத்
தோன்றும்   என  வருவித்து  உரைக்க.  நிரம்பிய  இலக்கண  முணராதார்  தாம்
வேண்டியவாறே  கூறிய  கூற்றைத்  தன்மொழியான்  நீக்கி  மாசுண்ட   மணியைத்
துடைப்பார்  போன்று  செய்தான்  என்பது,  `விளக்கினன்`  என்பதனாற் பெற்றாம்.
`குன்றத்தூர்ச்   சொக்கன் கையார் கனிபோல் கோவைக்கு உரையெழுதி விளக்கினன்`
என ஒரு தொடர் ஆக்குக.

      `பொய்யா`   என்னும்   எதிர்மறைப்   பெயரெச்சம்,  `மொழியார்` என்னும்
வினைக்குறிப்புப்  பெயரது  முதனிலையாகிய,  `மொழி`  என்னுங்  கருவிப்  பெயர்
கொண்டு   முடிந்தது.   `புகலும்`   என்னும்   பெயரெச்சம்,  `கோவை`  என்னுஞ்
செயப்படுபொருள்  கொண்டது.  `வாணன் கோவை`  என்றவழி ஆறாம் வேற்றுமை
செய்யுட்  கிழமைக்கண் வந்தது. `சோலைக் குன்றத்தூர்` என்பது உருபும் பொருளும்
உடன்தொக்க    தொகை.   `அட்டாவதானி`   என்பது   வடசொன்   முடிபாகிய
குறிப்புவினைப்       பெயரெச்சக்      குறிப்பாய்ச்,    `சொக்கன்`     என்னும்
பெயரோடுஇயைந்தது; இது,
  2`குறிப்புமுற் றீரெச்ச மாசுலு முளவே`

என்னும் விதிபெற்றது, நச்சினார்க்கினியர், `எச்சம் முற்றாதலன்றி முற்று எச்சமாகாது`
என்று கூறினாராலோ எச்சங்கண்டன்றே முற்றாய்த் திரிந்ததென்று சொல்லுதல்
கூடுவது, அது காணாது முற்றே கூறினமையால் என்க.
 
     கை என்பது ஆகுபெயர்.போல் என்னும் உவமவுருபு வினை யுவமத்தின் கண்
வந்தது.  தொல்காப்பியநூல்  என்ற வழி மூன்றாம்  வேற்றுமையுருபும்  பொருளும்
உடன்தொக்க   தொகை. நிலைமொழி யீறு திரிந்து கருத்தனாகு பெயராய்ப் பண்புத்
தொகை யாயிற்றெனினும் இழுக்காது.
 

உரைத் தற்சிறப்புப் பாயிரம்

முற்றிற்று.


     2. திருக்குறள் : புகழ் - 6. 2. நன்னூல், வினையியல் - 32.