பக்கம் எண் :

தஞ்சைவாணன் கோவை
284

 
அவையிரண்டும்  மணமாகா; அஃதென்னை யெனின், உலகியல்பின்கண் தாய்தமர்
அறியாது,  மணச்சடங்கும்  இன்றி  ஒருவன்  உரிமை கருதித் தாலிகட்டு  மணம்
மணமென்று   உலகின்கண்   உள்ளார்கைக்கொள்ளார்;   அவர்க்கே   மீண்டும்
மணச்சடங்குடனே   மணமுடிப்பார்;  ஆதலால்,   அந்தணர்     முதலாயினாரை
முன்னிட்டு   அவன்   மனையின்   மணச்சடங்குடனே   முடித்தலின்,  இதுவே
மணமாயினவாறு உணர்க. இவ்வாறு நாள்முறையாய்க் கூறிவந்து, ஐம்பத்தாறாநாள்
மணம் முடிந்ததென்று கூறியது என்னையெனின்,
 1`திங்க ளிரண்டி னகமென மொழிப`
என்னும்   அகப்பொருட்   சூத்திரத்து உரையில், இருதிங்களும் நாலு நாளிருக்க
மணமுடிப்பது   இயல்பென்று  இலக்கணங் கூறினமையாற் கூறியதென்று உணர்க.
(366)    
வரைதல் முற்றிற்று.
இரண்டாவது வரைவியல் முற்றிற்று.

1. இறையனாரகப்பொருள் - 32.