பக்கம் எண் :

கட
தஞ்சைவாணன் கோவை
310

 
எளிதென  எண்ணிக் கடல்நீரைஉட்கொண்டு இடியுடனே மேகம்  வாரா  நின்றது;
இதனைக்   கல்வி   யெல்லையெல்லாம்  காணப்பிரிந்த  தலைவர்   காண்கிலர்,
ஆதலால், யான் என் செய்கேன் என்றவாறு.

யாணர் - அழகு.  செய்யா என்னும் வினையெச்சம், செய்து  என்னும  இறந்தகால
வாய்பாடாகப் பொருள் கொள்க. உருமு - இடி.
(409)    
தலைமகளைப் பாங்கி ஆற்றுவித்தல்:
  காதற் கயம்படிந் துன்னொடு காமக் களிநுகரா
தோதற் ககன்ற புணர்வுடை யோருடை நீருலக
மாதர்க் கமைந்தருள் வாணன்தென் மாறை வரக்கடவர்
ஆதற் கணங்களை யாய்புய லேது அறிந்தருளே.
(இ-ள்.) அணங்கனையாய்!  காதலாகிய  குளத்திற்   படிந்து  உன்னொடு   கூடிக்
காமமாகிய   கனியை   நுகராது   ஓதற்பிரிவாகப்    பிரிந்த    அறிவுடையோர்
பூமிதேவியார்க்கு  உடையோனாகி  அமைந்தருளப்பட்ட வாணன் தென்மாறையில்
வரக்கடவ ராதற்க வந்த புயல் நிமித்தமென்று அறிந்தருள்வாய் என்றவாறு.
கயம் - குளம். புயல் - மேகம். ஏது - நிமித்தம்.
(410)    
செவிலி நற்றாய்க்கு முன்னிலைமொழியால்
அறத்தொடு நிற்றல்:
    செவிலி  நற்றாய்க்கு  முன்னிலைமொழியால்  அறத்தொடு  நிற்றல்  என்பது,
முன்னிலைப்  புறமொழியால்  உணர்த்தாது  முன்னிலை  மொழியனாலே களவை
வெளிப்படுத்திக் கூறல்.

ஓதற்பிரிவு முற்றிற்று.