பக்கம் எண் :

தஞ்சைவாணன் கோவை
48

 
புணர்ச்சிக்கண் தலைவியிடத்துப் பிறந்த குணங்களாற்றோன்றும் அன்பு. ஆதலால்,
புணர்ச்சிக்கண் குறைந்த வேட்கை இயற்கையன்பினானும்,  செயற்கையன்பினானும்
நிறையு மாதலான், புணராத முன்னின்ற வேட்கையும் அன்பும் புணர்ந்த  பின்னும்
ஒத்து நிற்குமென்று உணர்க. என்னை,

`அதுவே, தானே அவளே தமியர் காணக்
காமப் புணர்ச்சி இருவயி னொத்தல்`

      என்னும்   இறையனார்   அகப்பொருட்  சூத்திரத்தில், இருவயினொத்தல
் என்பதற்குப்   பொருள்,   புணராத   முன்னும்   புணர்ந்த  பின்னும்  ஆகிய
இரண்டிடத்தும்   வேட்கையும்   அன்பும்  ஒத்திருக்குமென்பது   அவ்வுரையாற்
கண்டுகொள்க.

(19)    

இயற்கைப் புணர்ச்சி முற்றிற்று.