|
|
முந்துறக் காண்டல்: |
முந்தறக்காண்டல் என்பது, முந்துபோலக் காண்டல்.
|
| 1மருவாய் நாப்பண் மயிலுரு வாய்நென்னல் வாணன்தஞ்சைத் தருவாய்த் தழைகொய்து தண்புனங் காத்துந் தடங்குடைந்து திருவாய் மலர்ந்து சிலம்பெதிர் கூயின்றொர் தெய்வதப்பெண் உருவா யொருதனி யேநின்ற தாலென் னுயிர்க்குயிரே. |
(இ-ள்.) நெஞ்சமே, நெருநல் பொருந்திய ஆயக்கூட்டத்து நடுவே மயிலின் வடிவாக இற்றைப்பொழுது வாணனது தஞ்சைச் சோலையிடத்துத் தழைகொய்து, மழைபெய்தலாற் குளிர்ந்த புனங்காத்து, வாவியில் நீராடி, திருவாய் திறந்து மலையெதிர் கூவி, ஒப்பற்ற தெய்வப்பெண்ணருவாய், ஒப்பற்ற தனியே யென்னுயிர்க்குயிர் நின்றது, காண்பாயாக என்றவாறு. |
ஆயநாப்பண் - ஆயக்கூட்டத்து நடு. தரு: சாதியொருமை. தடம் - வாவி. சிலம்பெதிர் கூவுதல் - ஒர் விளையாட்டு. ஆல்: அசை. நெஞ்சம்: முன்னிலையெச்சம்.
|
(35) |
முயங்கல்: |
முயங்கல் என்பது புணர்தல்
|
| 2மானா கரன்தஞ்சை வாணன் வரோதயன் மாறையன்னாள் தானாவி நின்றலர் தாமரை யேஅத் தடமலர்வாய் ஆனா தொழுகுசெந் தேனல்லி மேவு மரசவன்னம் யானா கிடைப்பது வேயின்ன பான்மை யிருவர்க்குமே.
|
(இ-ள்.) மானத்துக்குப் பிறப்பிடமாய் வரத்திலுதித்த தஞ்சைவாணனது மாறைநாடு போல்வாள் வாவியினின்று மலர்ந்த தாமரை, அவ்வாவித் தாமரையிடத்து நீங்காமலொழுகுஞ் செந்தேனையுடைய அகவிதழின்கண் மேவியிருக்கும் அரசவன்னம் யானாயினேன்; ஆ, இத்தன்மை யிருவர்க்குங் கிடைக்கத்தக்கதோ என்றவாறு.
|
எனவே, ஊழ்வினைப் பயத்தானன்றி முயற்சியாற் கிடைக்கத் தக்கதோ என்றவாறாயிற்று. மானாகரன், வரோதயன் இவ்விரண்டும் வடசொல் முடிபு; வினைமுற்று வினையெச்சமாய்த் திரிந்தது. தான் : சந்தவின்பப் பொருட்டு வந்தது. ஆவி - வாவி. ஆனாது - நீங்காது. அல்லி - அகவிதழ். ஆ: அதிசயக் குறிப்பு. கிடைப்பது - அரிதாகிய பொருள் வாய்ப்பு. ஏகாரம்: ஈற்றசை.
|
(36) |
|
1. அகப். விளக்கம், களவியல். சூ - 18. 2. திருமுரு. 226. |
|
|