உ
திருச்சிற்றம்பலம்
சிறப்புப் பாயிரம்
நேரிசை வெண்பா
செந்தமிழ்க்கு வாய்த்ததிருச் செந்திற் பதிவாழுங்
கந்தனுக்குப் பிள்ளைக் கவிசெய்தான்- அந்தோ
திருமாது சேர்மார்பன் தேர்பாகற் கன்பு
தருமால் பகழிக்கூத் தன்.
(அருஞ்சொல் உரை) பிள்ளைக்கவி - பிள்ளைத்தமிழ் நூல். அந்தோ.
வியப்பிடைச்சொல். திருமாது-இலக்குமி
தேவி. தேர்ப்பாகன் -
அருச்சுனுக்குத் தேரோட்டும் சாரதியான கண்ணன். மால்-அழகு,
பெருமை.
(1)
அவையடக்கம்
அத்தனையும் புன்சொல்லே
யானாலும் பாவேந்தர்
எத்தனையுங்
கண்டுமகிழ்ந் தெய்துவார்-முத்தி
புரக்குமரன்
தந்தகந்தன் பூணணிமுந் நான்கு
கரக்குமரன்
பிள்ளைக் கவி.
|