பக்கம் எண் :

New Page 1

2

திருச்செந்தூர்ப் பிள்ளைத்தமிழ்

    (அ-ரை) அத்தனையும் - முழுமையும்.  புன்சொல்.  புன்மொழி. 
பாவேந்தர் - கவிராயர் முத்திரபுரக்கும் அரன் வீடு உதவும் சிவன்.  கந்தன்
- பற்றுக்கோடாயுள்ளவன்.  கந்து - பற்று.  முந்நான்கு கரம்குமரன்-
பன்னிருகைகளுடைய முருகன்.                               

(2)

நூற்பயன்

மருநாள் மலர்ப்பொழில் உடுத்ததட மெங்கும் அலை
வாய்கொழித் தெறியுமுத்தை
வண்டலிடும் எக்கர்புடை சூழ்திருச் செந்தில்வரு
மயில்வா கனக்கடவுளெங்

    குருநாதன் ஒரு தெய்வ யானைதன் பாகன்
குறக்கொடிக் குந்தழைசிறைக்
கோழிக் கொடிக்குங் குமார கம்பீரன்
குறும்பிறை முடிக்கும்பிரான்

    இருநாழி நெற்கொண்டு முப்பத்தி ரண்டறமும்
    எங்குமுட் டாதளக்கும்
இறைவிதிரு முலையமுத முண்டுஞா னம்பெருகும்
    எம்பிரான் இனிய பிள்ளைத்

    திருநாமம் எழுதுவார் கற்பார் படிப்பார்
    செகம்பொது அறப்புரந்து
தேவாதி தேவரும் பரவுசா யுச்சியச்
 சிவபதத் தெய்துவாரே.

    (அ-ரை) மரு-மணம்.  நாள் மலப்பொழில்-அன்றலார்ந்த
பூக்களையுடைய சோலை.  தடம்-தடாகம்.  குளம்-வண்டல் இடும்-மகளிர்
விளையாடும்.  எக்கர்-மணல்மேடு.  வாகனம்-ஊர்தி