தெய்வயானைதன்
பாகம்-தெய்வயானையைப் பாகத்திலுடையவன்.
குறக்கொடி-குறக்குலத்திற் பிறந்த கொடிபோன்ற
வள்ளியம்மை. குறும்பிறை-
ளஞ்சந்திரன். பிரான்-எப்பொருட்கும் இறைவன் கம்பீரன் -
செருக்குடையவன். நாழி-நான்குழக்குக் கொண்டது. அறம்-தரும்
வகைகள். முட்டாது-குறைவு படாமல்.
நாமம். பெயர். பொது அறபுரந்து-
னக்கே உரிமையானதாகக் காத்து பரவு-துதி. சாயுச்சியம்-இறைவனோடு
இரண்டறக் கலப்பது.
க. காப்புப்பருவம்
திருமால்
பூமா திருக்கும் பசுங்களபப்
புயயூ தரத்துப் புருகூதன
போற்றக் ககன வெளிமுகட்டுப்
புத்தேள் பரவப் பொதிகைமலைக்
கோமா முனிக்குத் தமிழுரைத்த
குருதே சிகனைக் குரைகடற்குக்
குடக்கே குடிகொண் டிருந்தசெந்திற்
குமரப் பெருமான் தனைக்காக்க
தேமா மலர்ப்பொற் செழும்பொகுட்டுச்
செந்தா மரையில் வீற்றிருக்குந்
தேவைப் படைத்துப் படைக்குமுதல்
சேரப் படைத்துப் படைக்கும்உயிர்
ஆமா றளவுக் களவாகி
அனைத்துந் தழைக்கும் படிகருதி
அளிக்கும் படிக்குத் தனியேசங்
காழி படைத்த பெருமாளே.
|