பக்கம் எண் :

New Page 1

12

திருச்செந்தூர்ப் பிள்ளைத்தமிழ்

  வேதா முடித்தலை முடிக்குஞ் சடாடவியள்
 வெங்கொலை மடங்கலேறி 

வளையும் பனிப்பிறை மருப்புக் குறுங்கண்நெடு
மயிடாசு ரன்சிரத்தில்
வலியநடம் இடுகுமரி பகவதிச ரோருக
மலர்த்தாள் வணக்கமுறுவாம் 

உளையுந் தடந்திரைத் திமிரதம ரக்குழி
உவர்ப்பறா மகரவேலை
ஓலியிடுங் குண்டகழி சுவறிமே டாகவேல்
உள்ளுறை கழித்துநிருதக் 

களையுங் களைந்துகலன் அணிபுலோ மசைதன்மங்
கலநாண் அளித்தபெருமாள்
கடியமயில் வாகனப் பெருமாள் உவந்தெனது
கவிமாலை கொண்டருளவே.

    (அ-ரை) வேதா-பிரமன்.  சடாடவி-சடைக்காடு. மடங்கல்-சிங்கம். 
மகிடாசுரன்-எருமைக்கடா வடிவினனான அசுரன்.  மகிடம்-எருமை. 
சரோருகம்-தாமரை; நீரில் முளைப்பது.  திமிரம்-இருள்.  தமரம்-பேரொலி. 
குண்டு அகழி-ஆழமாகத் தோண்டப்பட்ட கடல்; சாகரம், சுவறி-வற்றி. 
புலோமசை-இந்திராணி, புலோமன் மகள்.  மங்கலநாண்-தாலி. கடிய-
வேகமான.          

(7)

காளி

  காயுங் கொடும்பகைத் தாருக விநாசினி
கபாலிகங் காளிநீலி
காளிமுக் கண்ணிஎண் தோளிமா தரிவீரி
கவுரிகலை யூர்திகன்னி