14 |
திருச்செந்தூர்ப்
பிள்ளைத்தமிழ் |
பள்ளக் கடல்நிரை கலக்கியூ ழியின்இருட்
படலமுழு துந்துடைத்துப்
படர்சுடர் விரித்துவரு பன்னிரு பதங்கர்பொற்
பாதமலர் சென்னிவைப்பாம்
உள்ளக் கறிப்பறா வரிவண்டு பண்பாட
ஓதிம நடிக்கமுள்வாய்
உட்குடக் கூன்வலம் புரிமுத்தம் உமிழநீர்
ஓடையிற் குருகுகாணக்
கள்ளக் கருங்கட் சிவந்தவாய் வெண்ணகைக்
கடைசியர் நுளைச்சியருளங்
களிகூரும் அலைவாய் உகந்தவே லனையெங்கள்
கந்தனைக் காக்கவென்றே.
(அ-ரை) திரை-அலை. ஆழி-சக்கரம், உருளி. புரவி-குதிரை, வேத
பாரகர்-வேதத்தை மேற்கொண்டவர். மறைவோர். படலம்-திரை, கூட்டம். பதங்கர்-சூரியர். ஓதிமம்-அன்னம்.
கூன் வலம்புரி-வளைந்த வலம்புரிச்சங்கு. குருகு-நாரை. நுறைச்சியர்-நெய்தல்நில மகளிர்.
(9)
முப்பத்துமுக்கோடி தேவர்கள்
பொதுவி லாடு மத்தற்க நீடு
பொருளை யோதி ஒப்பித்தசீலர்
புணரி தோய்ந கர்க்குச்ச காயர்
புலமை நீதி யொப்பற்ற கேள்வர்
குதலை வாய்மொ ழிச்சத்தி பாலர்
குருதி பாய்க திர்க்கொற்ற வேலர்
|