குறவர் பாவை சொற்கத்தின் மோகர்
குமரர் காவ லுக்கொத்த காவல்
மதுர கீத விற்பத்தி வாணர்
மகுட வேணி முத்துத்த ரீகர்
மவுன போன பத்திக்க லாபர்
மனையில் வாழ்வு வைப்புற்ற நேயர்
முதுமை யான சொற்பெற்ற நாவர்
முனிவர் வேள்வி இச்சிக்கும் ஊணர்
முடிவி லாதகற்பத்தின் ஊழி
முதல்வர் தேவர் முப்பத்து மூவரே.
(அ-ரை) பொது-அம்பலம். மத்தர்க்கு-ஊமத்த
மாலையணிந்த
சிவனுக்கு, நீடு பொருளை-பிரணவப் பெரும்பொருளை. சகாயர்-உதவியாளர்.
கேள்வர்-உரியவர்.
சத்திபாலர்-சத்திகட்குப்பாலராய் இருந்தவர். சொற்கம்-கொங்கை; முலை. உத்தரீகர்-மேலாடையர்.
கலாபர்-மயிலுடையவர்.
(10)
-----
2,செங்கீரைப் பருவம்
வெங்காள கூடவிடம் ஒழுகுபற் பகுவாய்
விரித்துமா சுணம் உமிழ்ந்த
வெங்கதிர் மணிக்கற்றை ஊழியிரு ளைப்பருக
வேய்முத் துதிர்ந்து சொரியக்
கங்காளர் முடிவைத்த கங்கா நதிக்கதிர்
கடுப்பக் குறுங்க வைக்காற்
|