பக்கம் எண் :

New Page 1

செங்கீரைப் பருவம்

17

    பொறைகொண்ட சுரர்மருவும் அண்டகோ ளகைமுகடு
பொதிரெறிய நிருதர் உட்கப்
பூச்சக்ர வாளகிரி கிடுகிடென வச்சிரப்
புருகூதன் வெருவி வேண்டுந்

திறைகொண்ட ளக்கவரு மயிலேறு சேவகா
செங்கீரை யாடியருளே
திரையெறியும் அலைவாய் உகந்தவடி வேலவனே
செங்கீரை யாடி யருளே.

(அ-ரை) கறை-விடம், நஞ்சு; முள்எயிறு-முள்போன்ற பல். துத்தி-புள்ளி. கட்செவி-கண்ணையே காதாகவுடையது; பஃறலை-பலதலை. காகோதரம்-ஆதிசேடனாகிய பாம்பு. வடபூதரம்-வடமலை. சலராசி-நீர்த்திரள் சுறுக்குஎழ-வற்ற. செந்தூளி-சிவந்த தூசி. கோளகை-வட்டம். பொதிர் எறிய-ஓட்டை பட, உட்க-பயப்பட. உட்கு என்னும் பகுதியடிப் பிறந்த வினையெச்சம், கிரிமலை; திறை-கப்பம், வெருவி-பயந்து; அஞ்சி. வெருவு; பகுதி.                     

(12)

    ஏர்கொண்ட பொய்கைதனில் நிற்குமொரு பேரரசின்
இலைகீழ் விழின்ப றவையாம்
இதுநிற்க நீர்விழின் சுயலாமி தன்றியோர்
இலையங்கு மிங்கு மாகப்

பார்கொண்ட பாதியும் பறவைதா னாகஅப்
பாதியுஞ் சேல தாகப்
பார்கொண்டி ழுக்கஅது நீர்கொண் டிழுக்கவிப்
படிகண்ட ததிச யமென