18 |
திருச்செந்தூர்ப்
பிள்ளைத்தமிழ் |
நீர்கொண்ட வாவிதனில் நிற்குமொரு பேழ்வாய்
நெடும்பூதம் அதுகொண் டுபோய்
நீள்வரை யெடுத்ததன் கீழ்வைக்கும் அதுகண்டு
நீதிநூல் மங்கா மலே
சீர்கொண்ட நக்கீர னைச்சிறை விடுத்தவா
செங்கீரை யாடி யருளே
திரையெறியும் அலைவாய் உகந்தவடி வேலனே
செங்கீரை யாடி யருளே.
(அ-ரை) விழின் - விழுந்தால்,
கயல்ஆம் - கயல்மீன் ஆகும். சேல் - மீன். அதிசயம் - வியப்பு. வாவி - தடாகம், பேழ்வாய்
- பெரிய வாய்.
பூதமது - அது : துணைமொழி. வரை எடுத்ததன் கீழ் - மலையிலுள்ள
குகையில், திருப்பரங்குன்றத்திலுள்ள
சரவணப் பொய்கையில் சிவவழிபாடு
புரியலான நக்கீரனார் அப் பொய்கையில் விழுந்த அரசிலையின்
ஒருபாதி
நீரிலும் மற்றொரு பாதி நிலத்திலும் பொருந்தும்படி வீழ்தலைக்
கவனிக்கையில்; நீரில்
விழுந்த பகுதி மீனாகவும் நிலத்தில் விழுந்த பகுதி
பறவையாகவும் வடியுற்று ஒன்றையொன்று இழுத்துக்
கொண்டிருக்கும்
காட்சியில் மயங்கியது கண்ட சிவபூதம் இதுவே வாயிலாக. இவரைப் பற்றித்
தொளாயிரத்துத்
தொண்ணூற்றொன்பது பூசைவழுவியர்களுடன் சேர்த்துக்
குகையில் அடைத்துப் பின் புசிக்கவேண்டும் என்றிருப்பது
உணர்ந்த
நக்கீரனார் முருகப் பெருமானை முன்னிலைப்படுத்தி, திருமுரு
காற்றுப்படை பாடவே,
முருகன் தோன்றிப் பூதத்தையும் துரத்திச்
சிறையிடப்பட்டவர்கள் அனைவரையும் சிறைவீடும் செய்து
மகிழ்வித்தார்
என்பது இதிலடங்கிய வரலாறு.
(13)
|