பக்கம் எண் :

இந

22

திருச்செந்தூர்ப் பிள்ளைத்தமிழ்

இந்திரை யுங்கர சங்கமு குந்தனும்
இந்தா வந்தார்பார்

அந்தண னுங்கலை மங்கையு நின்சர
ணஞ்சேர் கின்றார்போய்
அண்டரு டன்பல தொடர்ப ணிந்தனர்
அஞ்சே லென்றாளாய் 

முந்துத டந்திரை யுந்துவ லம்புரி
மொண்டே கொண்டேக
முன்றில்தொ றுந்தர ளங்கள் உமிழ்ந்திட
முந்தூர் நந்தூருஞ் 

செந்தில்வ ளம்பதி வந்தரு ளுங்குக
செங்கோ செங்கீரை
தென்றல்ம ணங்கமழ் குன்றுபு ரந்தவ
செங்கோ செங்கீரை. 

(அ-ரை) சசி-இந்திராணி. பரவும்படி-போற்றும்படி. இந்திரை-இலக்குமி. முகுந்தன்-திருமால். அந்தணன்-பிரமன். அஞ்சேல்-பயப்படாதே. ஆளாய்-ஆட்கொள்வாய். உந்து-தள்ளும். முன்றில்தொறும்-முற்றமெங்கும். நந்து-சங்கு. ஊர்-நகர், தவழ். தென்றல்-தெற்கிருந்து வருங்காற்று. செங்கோ செங்கீரை; செங்கீரையாடியருளே என்பதன் மரூஉ.                          

(17)

  வரைபொரு புளகித மலைமுலை அரிவையர்
வந்தார் பந்தாட
மறிகட லிறைதரு நவமணி வடமது
வண்டார் தண்தார்பார்