பக்கம் எண் :

செங்கீரைப் பருவம்

23

உரையொரு கவிஞரு முனிவரும் அமரரும்
உன்போ லுண்டோதான்
உரையெமர் வழிவழி யடிமையி துளதென
உன்பா லன்பானார் 

கரைபொரு கடறிட ரெழமயில் மிசைவரு
கந்தா செந்தூரா
கழிமட அனமொடு முதுகுரு கொருபுடை
கண்சாய் தண்கானல் 

திரைபொரு திருநகர் மருவிய குருபர
செங்கோ செங்கீரை
செருவினில் எதிர்பொரு நிசிசரர் தினகர
செங்கோ செங்கீரை. 

(அ-ரை) புளகிதம்-மயிர்ச் சிலிர்ப்பு. அரிவையர்-பெண்கள். மறி-மடங்கி எறிதல். இறை-தலைவன். தண்தார்-குளிர்ந்த மாலை. எமர்-எம்மவர். திடர்-மேடு. கண்சாய்தல்-தூங்குதல். கானல்-கடற்கரைச் சோலை. மருவிய-பொருந்திய

(18)           

வேறு

  உரைசெய் வரையர மகளிர் முறைமுறை
உன்பேர் கொண்டாட
உலகும் இமையவர் உலகும் அரகர
உய்ந்தோம் என்றாட 

வரைசெய் வனமுலை மகளி ரெழுவரும்
வந்தே பண்பாட