பக்கம் எண் :

New Page 1

செங்கீரைப் பருவம்

25

    குரவுநெ ருங்கும் எக்கரிற் கானல்
        உழுநர்ப ரம்பின் நெற்குலைத் தாளில்-இளைய
        குமரர் ஊர்சிறு திண்டேர் மென்காவில் 

    இறுகுகு ரும்பை யொத்தபொற் பார
        நகிலரி ருந்து வைத்தவைப் பூசல்-அருகில்
        இளைஞர் ஊடலில் வண்டார் தண்டாரில்

    எவரும கிழ்ந்த சித்திரச் சாலை
        நிழன்மணி துன்று தெற்றியில் தேவர்-மகுடம்
       இடறு பூழியில் வங்கா ளஞ்சீனம்

    எனமொழி தங்கும் அற்புதத் தீவில்
        வணிகரின் வந்த மிக்கபட் டாடை-வகையில்
        ஏறியும் ஆரவடம்பூ ணும்பூணில்

    இரைகவர் ஞெண்டு முக்குளித் தூறும்
        அளறுகி டங்கில் வித்துவித் தாரத்-துரவில்
        இடுமுள் வேலியில் வெங்கா மன்காண

    முறுகவி ளைந்து முற்றி முத்தேறு
        கரியக ரும்பு சுற்றுசிற் றாலை-நிலையின்
       முதிய தாழியில் வெந்தா றும்பாகின்

    முடியைவி ளம்பி வைத்துமுட் டாது
        கடைசிதர் கின்ற கட்குடப் பானை-முதுகின்
        முளைகொள் சாலியின் மென்பூ கந்தோறு

    முருகுது ளும்பு கொத்துடைப் பாளை
        சிதறியு திர்ந்த பித்திகைப் பீட-மறுகின்
        முதல்வர் தேவியர் பந்த டூங்காவின்