பக்கம் எண் :

கனமண

32

திருச்செந்தூர்ப் பிள்ளைத்தமிழ்

கனமணி குலவுங் குண்டலம் அரைஞா
ணோடே போனால்வார் 

பொருமிய முலையுங் தந்திட வுடனே
தாய்மார் தோடாரோ
புரவலர் எவருங் கண்டடி தொழுவார்
போதாய் போதாநீள் 

சரவண மருவுந் தண்டமிழ் முருகா
தாலோ தாலேலோ
சதுமறை பரவுஞ் செந்திலை யுடையாய்
தாலே தாலேலோ. 

(அ-ரை) மரகதம்-பச்சை. வாகாய்-ஒழுங்காய், வார்வேர்-நீண்ட வேர்வை. வேர்: முதனிலைத் தொழிற்பெயர். கரமலர்-கைத்தாமரை. மடவார்-இளம்பெண்டிர். மடம்-அழகுமாம். அரைஞாண்-அரைநாண், ஞாண்என்பது நாண் என்பதன் போலி. பொருமிய-விம்மிய. போதாய்-வருவாய். போது-விரியுந் தருணப் பூ. 

(26) 

வேறு 

கூருமிகல் சாய்த்த வீரா தீரா தார்மார்பா
கூறுமியல் பார்த்துன் மேலே யாரார் பாடாதார்   

மேருவரை நாட்டு வாழ்வார் வானா டாள்வார்போல்
வேளையென் மீட்டுன் மேலே வீழ்வார் சூழ்வார்பார்
 

ஆருமிரை பார்த்து நீள்நீ ருடே தாராமே
யானகழி நீக்கி மேலேநாவா யோடேசேல்   

சேருமலை வாய்க்கு நாதா தாலோ தாலேலோ
தேவர்சிறை மீட்ட தேவா தாலோ தாலேலோ.