பக்கம் எண் :

New Page 1

தாலப் பருவம்

33

    (அ-ரை) கூரும் இகல்-மிகும் போர். சாய்த்த-அழித்த. இயல்-நன்மை. மேருவரைநாடு-பாண்டி நாடு; பாண்டிய னொருவன் மீனக்கொடியை மேரு மலையிலே நாட்டி அரசாண்டதனாலே பாண்டி நாடு மேருமலை நாடெனப்பட்டது. ஆரும்-உண்ணும். தாரா-பறவை. மேயான-மேய்தலான. கழி-உவர்நீர் நிலம். நாவாய்-கப்பல்.                                                        

(27)

வேறு 

அரைவடமுந் தண்டையும் மின்புரை யரைமணியுங்
கிண்கிணி யுங்கல னணியு மாறா வீறார்சீர்
அறுமுகமுந் தொங்கல் சுமந்தபன் னிருகரமும்
குண்டல முங்குழை யழகும் ஆரார் பாராதார் 

விரைபொருமென் குஞ்சிஅ லம்பிய புழுதியுமங்
கங்குழை பண்டியு மெலியு மேலே வீழ்வார்பார்
வெகுவிதமுங் கொண்டு தவழ்ந்திடில் அவரவர்தங்
கண்கள் படும்பிழை விளையு மேதே னேகாதே 

வரைமணியும் தங்கமும் ஒன்றிய கனபரியங்
கந்தனில் இன்றுகண் வளர வாராய் வாழ்வேநீ
மணிநகையுங் கொண்டு துயின்றிலை விரலமுதங்
கொண்டுகி டந்தனை மதுரமாய்நீ பேசாயோ 

திரைபொருதென் செந்தில் வளம்பதி வளரவருங்
கந்தசி வன்பெறு சிறுவா தாலோ தாலேலோ
திசைமுகனுஞ் சங்கரி யுஞ்சது மறையும் இறைஞ்
சும்பரை அம்பிகை சிறுவா தாலோ தாலேலோ. 

(அ-ரை) அரைவடம்-அரைநாண். மின்புரை-மின்னலை ஒத்த வீறுஆர்-பெருமை பொருந்திய. தொங்கல்-மாலை விரை-