36 |
திருச்செந்தூர்ப்
பிள்ளைத்தமிழ் |
பொன்னை ஒத்த, வேய்வார்-சூடுவார். சீறாதே-கோபியாமலிரு. சங்கரி
மருகா-சங்கைக் கையிற்கொண்ட திருமாலின் மருகனே! சங்கரி-சங்கரன் மனைவியாகிய உமாதேவி.
இயல்தேர்-தமிழை ஆராய்கின்ற.
(30)
4. சப்பாணிப்பருவம்
பரவிய நவமணி அழுத்துகல னுக்கழகு
பாலித்து வீறு பெற்ற
பன்னிரு புயங்குலுங் காமல்நீள் குழைதொறும்
பருவயிர குண்ட லங்கள்
இரவியொளி மட்கநின் றசையாமல் அமுதொழுகு
இந்துமுக மண்ட லத்தில்
எழுதரிய திருநுதற் புண்டரங் குறுவெயர்
விறைக்கச் சிதைந்தி டாமல்
கரகமல மலர்விரல் சிப்புறா மல்கடக
கங்கணம் ஒலித்தி டாமல்
கழிவண் டலம்புங் கருங்குவளை ஓடைசூழ்
கழிதொறுங் கானல் தோறுந்
தரளமுழு மணிநிலவு தருசெந்தில் வேலவா
சப்பாணி கொட்டியருளே
சமரமுக ரணவீர பரசமய திமிராரி
சப்பாணி கொட்டி யருளே.
(அ-ரை) பரவரி - புகழ்தற்கருமையான.
கலன் - அணி குழை-காது. மட்க - மழுங்க, இந்துமுகமண்டலம்-சந்திரன் போன்ற முகவட்டம். புண்டரம்-திருநீற்றின்
முக்கீற்றுத்தொகுதி, குறு
|