|
38 |
திருச்செந்தூர்ப்
பிள்ளைத்தமிழ் |
பௌவமெறி கடலாடை உலகிலொரு வேடுவன்
பறவைக்கு நிறைபு குந்த
பார்த்திவன் பாவையும் இயற்குலச் சிறையும்
பணித்தருள மதுரை புக்குத்
தெவ்வரிடு திருமடத் தெரிசெழிய னுடலுறச்
சென்றுபற் றலும்எ வர்க்குந்
தீராத வடவையனல் வெப்புமுது கூனுந்
திருத்தியொரு வாது வென்று
வெவ்வழலில் எழுதியிடும் ஏடும் பெருக்காற்று
விட்டதமி ழேடும் ஒக்க
வேகாம லெதிரே குடக்கேற வெங்கழுவில்
வெய்யசமண் மூகர் ஏறச்
சைவநெறிஈடேற வருகவுணி யக்குழவி
சப்பாணி கொட்டி யருளே
சமரமுக ரணவீர பரசமய திமிராரி
சப்பாணி கொட்டி யருளே.
(அ-ரை) பௌவம்-உப்புடைய. கடலாடை-கடலாகிய
உடை. பறவை-புறா. பார்த்திபன்-சிபிச்சக்கரவர்த்தி. நிறை-துலாத்தட்டு. சோழ மன்னனாகிய
சிபி யாகம் செய்த காலத்தில் இவன் உத்தம குணத்தைப் பரீட்சிக்க விரும்பிய இந்திரன் பருந்தாகவும்,
அக்கினி புறாவாகவும் வடிவுற்று பருந்து புறாவைத் துரத்தப் புறா சிபியிடம் அடைக்கலம் புகுந்தது.
பருந்து புறாவைத் தன்னிடம் கொடுத்கும்படி பன்முறை வேண்டியும் இசையாமல் அடைக்கலப் பொருளுக்கு
ஈடாகத் தன் உடலில் தசையை அறுத்தத் தராசில் வைக்கவும் சமமகாமை கண்டுதானே தராசில் ஏறினன்.
இவ்வருமை கண்ட இந்திரனாகிய பருந்தும், புறாவாகிய
|