|
அக்கினியும் மகிழ்ந்து வாழ்த்திச் சென்றனர் இவன் குலத்துப் பாவை மங்கையர்க்கரசி.
இவர் மதுரைக் கூன் பாண்டியனை மணந்து தம்முடன் வந்த குலச்சிறை நாயனார் என்னும் மந்திரியுடன்,
திருஞானசம்பந்தர் திருவருளால் பாண்டிய நாட்டை மூடியிருந்த சமணிருளை ஓட்டி அரசனையும், நாட்டாரையும்
சைவ சமயந் தழுவச் செய்தவர். தெவ்வர்-பகைவராகிய சமணர். எரி-தீக்கொடுமை. செழியன்-பாண்டியன்
முதுகூன்-முதிர்ந்த கூனல். குடக்கு-மேற்கு. மூகர் - ஊமையர். இவ்வடிகளில் கவுணியக் குழந்தையாகய திருஞானசம்பந்தர்
பாண்டியன் சுரநோய் தீர்த்தபின் அமணர் விருப்பப்படி அனல்வாதமும் புனல்வாதமும் புரிந்துவெற்றி
கண்டு அமணர் சொற்படி அவர்களே கழுவேறும்படி செய்தனர் என்னும் வரலாறு குறிக்கப்படுவதாம்.
(33)
பைந்தாள் தழைச்சிறைக் கானவா ரணமருவு
பந்திரிடு முல்லை வேலி
பாயுமுட் பணைமருப் பேறுதழு வியுமுடைப்
பாலாறா மேனி மடவார்
கொந்தார் குரும்பைஇள வனமுலை முகக்கோடு
குத்தக் குருந்தொ சித்துங்
குறுங்கழைத் துண்டந் தனில்சிறு துளைக்கருவி
குன்றுருக நின்ற ழைக்குஞ்
செந்தா மரைக்கைவிரல் கொடுபுதைத் துஞ்சுருவி
தெரியவிரல் முறையில விட்டுந்
தேனுவின் பிறகே திரிந்துங் கவுட்குழி
திறந்துமத மாரி சிந்துந்
|