நடந்து தாமம்-கடப்பமாலை. குரு-நிறம். மழவிடை-இளமை யுடைய இடபம் போல்பவனே.
(37)
வரைபுரை புயமிசை இடுதொடி அணிகலன்
மற்றுள முத்தார
மணிமுடி குழையிடும் இருசிகை யழகெழ
மைக்குவ ளைப்போதின்
விரைசெறி குழலியர் செவிலியர் அவரவர்
மிக்கவி ருப்பானார்
விபுதரு முனிவரும் உனதடி பரவியுன்
வெற்றியு சைப்பார்சீர்
அரைமணி யுடைமணி கணகண கணவென
அத்திமு கத்தோனும்
அரிபிர மனுமுமை கணவனும் மனமகிழ்
அற்புவி ளைத்தார்பார்
குறைகடல் அலையெறி திருநக ரதிபதி
கொட்டுக சப்பாணி
குருபர சரவண பவசிவ மழவிடை
கொட்டுக சப்பாணி.
(அ-ரை) தொடி-தோள்வளை.
விரைசெறி-வாசனைநெருங்கிய. விபுதர் - தேவர். உடைமணி-மேகலா பரணத்திற் கோத்த மணி. அத்திமுகத்தோன்-யானைமுகம்
உடையோன். அற்பு-அன்பு.
(38)
|